என் முதல் விருது - சப்ராஸ் அபூ பக்கருக்கு நன்றி

நேற்று பதிவர் சந்திப்புக்கு கொழும்பு போய் வந்த களைப்பு நீங்கி இன்று அந்த சந்திப்பு பற்றி எழுதலாம் என நினைத்து எனது பதிவு தளத்துக்கு சென்றால் அங்கு ஒரு இனிய ஆச்சரியம் காத்திருந்தது, நண்பர் சப்ராஸ் எனக்கு "Scrumptious Blog Award" எனும் விருதை வழங்கியிருந்தார். ரொம்ப சந்தோசப்பட்டேன் ஏனென்றால் எனது எழுத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்ததை இட்டு, அதற்கு அடுத்து தான் அவர் ரொம்பவே கஷ்டமான ஒன்றையும் கொடுத்திருந்தார், இதை இன்னும் 10 பேருக்கு வழங்க வேண்டுமாம். அநேகமாக நான் எல்லாருடைய பதிவுகளையும் வாசிப்பேன், ஒரு பின்னூட்டத்தையும் போட்டு வைப்பேன் காரணம், என்னை பொருத்த வரையில் எனக்கு வந்த பின்னூட்டங்கள் எனது எழுத்துகளுக்கு வந்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். நான் அடிக்கடி விஜயம் செய்யும் 10 பேருக்கு இந்த விருதை வழங்குகிறேன் நீங்களும் இன்னும் 10 பேருக்கு வழங்கினால் அவர்களது படைப்புகளுக்கு ஊக்கமாக இது அமையும் என கருதுகிறேன். அவர்களுக்கு விருது வழங்க நான் நிச்சயமாக தகுதியற்றவன் தான், ஆனால்  தொடர்ந்து உங்களை வாசிக்கும் உங்கள் ரசிகனால் வழங்கப்பட்ட பாராட்டாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

01. வந்தியத்தேவன்
     இலங்கையின் மூத்த பதிவர், நான் எழுதுவதை ஊக்குவிக்கிறவர்,  03 வருடமாக எழுதுபவர், எனது வலை பற்றி மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் வந்ததை அதே கணம் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினார், இந்த செயலில்  அவர் பதிவர்களை எவ்வளவு நேசிக்கிறார் என தெரிய வந்தது,

02. லோஷன்
    நான் எப்பொதும் வாசிக்கும் பதிவுகளை எழுதுபவர், ஜனரஞ்சக பதிவுகளை எழுபவர், எப்போதுமே எனக்கு பிடித்த அறிவிப்பாளர்.

03. வால்பையன்
  நான் எழுத தொடங்கி என்னை யாரும் பின் தொடரவில்லையே, நம்ம பதிவுகள் யாரையும் சென்றடையவில்லையோ என என நினைத்திருந்த போது என்னை பின் தொடர்ந்த முதலாமவர்.

04. சந்ரு 
 எப்பவுமே தன் கருத்துக்களை சொல்லுறவங்கள எனக்கு பிடிக்கும், வால்பையனுக்கு தன் கருத்துக்களை மறுப்பு அறிக்கையாக சொல்லி ஆனால் அவர் கூறிய நல்ல கருத்துக்களை ஏற்று கொண்டார், மற்றவர் மீது தன் கருத்துக்களை திணிக்காமல் தனது சொந்த கருத்தை தெரிவிப்பவர்.

05. நிலாமதி அக்கா
சிறிய சிறிய கதைகளை உணர்வுபூர்வமாக வழங்குபவர்.

06 மற்றும் 07. கீதா ஆச்சல் மற்றும் அம்மு
இவங்க பக்கத்துக்கு போய் பாருங்க எப்படியும் சமைக்க கத்துக்கணும் என்று தோணும், இவங்க குறிப்ப பல பேருக்கு காட்டி பேர் வாங்கிட்டேன்.

08. சசதீஷ்
 சதஷ் என்ற பேருக்கு முன்னால் சேர்த்ததனால் சசதீஷ் என எழுதி இருக்கிறேன் சரியோ தெரியவில்லை, லோஷனை போல ஜனரஞ்சக பதிவுகளை எழுதுறவர், இந்திய சினிமாக்களுக்கு இலங்கை பதிவர்கள் சார்பாக விருது கொடுக்கிறவர்.

09. கணிணி மென்பொருட்களின் கூடம் எழுதும் வடிவேலன்  அவர்கள்
  கணினி மென்பொருட்கள் சம்பந்தமாக அழகாவும் தெளிவாகவும் எழுதுபவர்

  என்ன 09 விருதுகள் தானே கொடுத்தேன் என்று பார்க்கிறீர்களா? 10வது  விருதை நான் எப்போதும் வாசிக்கும் நண்பர் சப்ராஸுக்கு வழங்குகிறேன். நீங்கள் எனக்கு  தந்ததால் நான்  உங்களுக்கு தர வேண்டியதில்லை  எனறு இல்லையே ஆகையல உங்களுக்கும் ஒன்று.


திரும்பவும் செல்லிக் கொள்ள  வேண்டியது என்ன வென்றால் இவன் பெரிய இவனா விருது கொடுக்க வந்துட்டான் என நீங்கள்  யோசிக்க வேண்டாம்  உங்களை எல்லாம் ரொம்ப வாசிக்கிறவன்  என்ற ரீதியில் (உரிமையில்) தந்திருக்கிறேன்.

நன்றி  வணக்கம் வாழ்த்துக்கள்



15 Responses
  1. Vadielan R Says:

    நண்பர் யோவாய்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் விருதினை பெற்றுக் கொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் விருது என்ன தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும். நன்றி


  2. GEETHA ACHAL Says:

    மிகவும் நன்றி யோகா...விருதினை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.


  3. Admin Says:

    நன்றிகள் நண்பா உங்கள் அறிமுகம் அண்மையில்தான் கிடைத்தாலும். உங்கள் இடுகைகளை பார்க்கத் தவறியதில்லை..

    உங்கள் முஉலம் விருது கிடைத்ததில் சந்தோசம்.... நன்றிகள் பல.

    விருது பெற்ற ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


  4. ரொம்ப நன்றி யோ... அன்புள்ளத்தோடு என் விருதை ஏற்றுக் கொண்டமைக்கு. தொடருங்கள் நிச்சயம் இன்னும் நிறைய விருதுகள் உங்களை வந்தடையும். விருது பெற்ற என்னய்யா உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்....


  5. நன்றி யோ .....விருது தந்த உங்களுக்கு என் நன்றிகள். உங்கள் தட்டிக்கொடுப்பு என்னை மேலும் ஆக்குவிக்கும். மீண்டும் என் உள்ளத்தால் நன்றி.


  6. வடிவேலன் ஆர்.
    நண்பர் யோவாய்ஸ் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் விருதினை பெற்றுக் கொண்டேன். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் விருது என்ன தொடர்ந்து எழுத ஊக்குவிக்கும். நன்றி

    நன்றி வடிவேலன் அவர்களே தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கிறோம்.


  7. This comment has been removed by the author.

  8. ந்ரு said...

    நன்றிகள் நண்பா உங்கள் அறிமுகம் அண்மையில்தான் கிடைத்தாலும். உங்கள் இடுகைகளை பார்க்கத் தவறியதில்லை..

    உங்கள் முஉலம் விருது கிடைத்ததில் சந்தோசம்.... நன்றிகள் பல.

    விருது பெற்ற ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி சந்ரு அவர்களே
    ஊடகப்பணிகளோடு தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்


  9. சப்ராஸ் அபூ பக்கர் said...

    ரொம்ப நன்றி யோ... அன்புள்ளத்தோடு என் விருதை ஏற்றுக் கொண்டமைக்கு. தொடருங்கள் நிச்சயம் இன்னும் நிறைய விருதுகள் உங்களை வந்தடையும். விருது பெற்ற என்னய்யா உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்....

    நன்றி தோழா! வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கிறோம்.


  10. கீதா ஆச்சல் said...

    மிகவும் நன்றி யோகா...விருதினை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி கீதா ஆச்சல் அவர்களே!

    தொடர்ந்து சுவையாக (சுவைக்க சுவைக்க) எழுதுங்கள்.


  11. நிலாமதி said...

    நன்றி யோ .....விருது தந்த உங்களுக்கு என் நன்றிகள். உங்கள் தட்டிக்கொடுப்பு என்னை மேலும் ஆக்குவிக்கும். மீண்டும் என் உள்ளத்தால் நன்றி.

    நன்றி நிலாமதி அக்கா அவர்களே தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கிறோம்.


  12. விருதுக்கு நன்றி யோ(ஏற்கனவே தம்பி கீத்தும் இதே விருதை வழங்கியிருக்கிறார்) உங்கள் பதிவர் சந்திப்புப் பதிவில் சில விடயங்கள் விளக்கவேண்டும் பின்னர் வருகிறேன்


  13. உங்கள் விருதுக்கு நன்றிகள். விருது பெற்ற மற்றவர்களுக்கும் நன்றிகள். இப்போது நிறைய பதிவர்கள் அறிமுகமாகி இருக்கின்றார்கள். அவர்கள் பதிவுகளை படித்து வரிகின்றேன். மிக விரைவில் உங்கள் சங்கிலியை தொடர்வேன்.


  14. வந்தியத்தேவன் said...

    விருதுக்கு நன்றி யோ(ஏற்கனவே தம்பி கீத்தும் இதே விருதை வழங்கியிருக்கிறார்) உங்கள் பதிவர் சந்திப்புப் பதிவில் சில விடயங்கள் விளக்கவேண்டும் பின்னர் வருகிறேன்

    நன்றி வந்தி


  15. SShathiesh said...

    உங்கள் விருதுக்கு நன்றிகள். விருது பெற்ற மற்றவர்களுக்கும் நன்றிகள். இப்போது நிறைய பதிவர்கள் அறிமுகமாகி இருக்கின்றார்கள். அவர்கள் பதிவுகளை படித்து வரிகின்றேன். மிக விரைவில் உங்கள் சங்கிலியை தொடர்வேன்.

    வருகைக்கு நன்றி சசதீஷ்