இங்கிலாந்து பயோ டேட்டா


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயோ டேட்டா குமுதம் ஸ்டைலில்

பெயர் : இங்கிலாந்து கிரிக்கெட் டீம்
டிரைவர் : முன்னர் வோகன் இப்பொழுது கெவின் பீட்டர்சன்
நீண்டகால தொழில் : எல்லா நாட்டிலும் அடி வாங்குவது
தற்போதைய தொழில் : இந்தியாவில் செமத்தியாக வாங்கி கட்டி கொள்வது
நீண்டகால எதிரி : ஆஸ்திரேலியர்கள்
தற்போதைய எதிரி : இந்தியர்கள்
ஒரே பெருமை : கிரிக்கெட் உலகின் தாயகம்
ஒரே எரிச்சல் : யுவராஜ் சிங்
ஒரே நிம்மதி : இந்த முறை IPL விளையாடலாம்
விளையாட்டு பிள்ளை : அன்ட்ரெவ் பிளின்டோப்
மறக்க முடியாதது : ஷேன் வார்ர்ன் & முரளிதரன்
சமீபத்திய சாதனை : பாகிஸ்தான் பந்தை சேதபடுத்தியாதாக
கூறி வென்றது
நீண்டகால சாதனை : கிரிக்கெட்டை உலகம் முழுவதும் கொண்டு சென்றது
நீண்டகால வேதனை : ஒரு உலக கோப்பையை கூட வெல்ல முடியாதது
குறிக்கோள் : எப்படியாவது யுவராஜ் சிங் விக்கெட்டை வீழ்த்துவது


A.R. Rahman எனக்கு பரிச்சயமானது இப்படித்தான்

வார இறுதி எதாவது மியூசிக் சம்பந்தமாக எழுத வேண்டும் என உட்கார்ந்து விட்டேன் என்ன எழுதுவது என யோசிக்கையில் எனக்கு பிடித்த பாடல்களை பற்றி எழுதலாம் என முதலில் யோசித்தேன், எப்படியும் எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி எழுதினால் அதில் A.R. Rahman பற்றி தான் எழுத வேண்டி வரும், ஆகையால்
A.R. Rahman பற்றியே எழுதி விடுகிறேன்...

எனக்கு A.R.R. அறிமுகமானது நான் ஒன்பதாம் வகுப்பு அதாவது பதம் ஆண்டு படிக்கையில், அப்போதைய என் போன்ற டீன் ஏஜ் மாணவர்களின் ஏக்கங்கலான ஹிந்தி பாடல்கள் எல்லாம் ஆங்கில பாடல்களை போல கேட்க மிக அருமையாக இருக்கின்றது எப்ப நம்ம தமிழ் பாடல்கள் இப்படி வர போகுது என எதிர் பார்த்திருந்த போது தான் "சின்ன சின்ன ஆசை" பாடல் எங்களை எல்லாம் யாருடா இந்த புது இசை அமைப்பாளர் என கேட்டு வியந்தோம், அப்புறம் யாரோ ரகுமானாம்டா சின்ன வயசாம்டா என பேசி கொண்டோம், மேலும் அதே படத்தில் உள்ள "புது வெள்ளை மழை" புது விதமான ஒரு மெலடியை வழங்கியது. அந்த நேரத்தில் என்னக்கு ரொம்ப பிடித்த பாடல் இதுதான் (இன்னும் எனக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடலுக்கு இடமுண்டு)... S.P.B. யின் காலத்தை வென்ற குரலின் இனிமையான பாடலான "காதல் ரோஜாவே" அப்போதைய காலங்களில் தாலாட்டு ஆகவே இருந்தது முற்றிலும் உண்மை, இப்படியே A.R.R இன் பாடல்களை கேட்டு கேட்டு என் வகுப்பு தோழர்கள் எல்லாம் A.R.R. ரசிகர்களாகவே மாறி விட்டோம்.


ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல் மாத்திரம் ஹிட் ஆகும் காலத்திலேயே ரோஜா படம் வந்து ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகலாம் என தமிழ் இசை வரலாற்றை திருப்பி போட்டது...

இப்படியே நாங்கள் A.R.R. பாடல்களுக்கு ரசிகர்களாக மாறி இருந்தோம், நாங்கள் G.C.E. (O/L) வகுப்பில் படித்து கொண்டிருந்த நேரம் வந்த காதலன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் எங்களை ஆடவைத்தன, அதே வருடம் வந்த Bombay படத்தில் இருந்த "உயிரே உயிரே" பாடல் எங்களை உருக வைத்து A.R.R இன் பைத்தியமாகவே மாற்றி விட்டது, ஹரிஹரன் ரசிகர்கள் அதிகம் பேருக்கு பிடித்த பாடல் இதுவாகவே இருக்கும்...



இப்பதிவு தொடரும்


லேப்டாப் வாங்கலியோ லேப்டாப்

இது என் சொந்த சரக்கு அல்ல மின்னஞ்சலில் வந்தது... புதிது புதிதா என்னென்னவோ வரும் போது நாம லேப்டாப் தயாரிப்பாளர்கள் புது விதமாக லேப்டாப் மாதிரிகளை வெளியிட்டிருப்பதாக என் தோழி ஒருத்தி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்திருந்தாள், உண்மையோ இல்லை இது கிராபிக்ஸ் வேலையோ தெரியாது, ஆனால் இப்படங்கள் ரசிக்க தக்கவையாக இருக்கிறது, so ரசிப்போம், சுவைப்போம்
































வாழ்த்துவோம் வரவேற்போம்

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுகிடையிலான டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து விட்டன... யாராலும் வெல்ல முடியாத அணி என பெயரெடுத்துள்ள மன்னிக்கவும்.... பெயரெடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய 2-0 என வெற்றி கொண்டது.. ஆசியர்களான எமக்கு சந்தோசத்தை தரும் விடயமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை,


பல காரணங்களுக்காக இப்போட்டி தொடர் பலராலும் மறக்க முடியாது,

கங்குலி, கும்ப்ளே (சில வேளை டிராவிட்) விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி தொடர், இனி இந்திய அணியின் Fab 5 என இருந்தது இனி Fab 3 (டிராவிட்டை அணியை விட்டு நீக்காமல் இருந்தால் அல்லது அவராகவே அண்ணியை விட்டு நீங்காமல் இருந்தால்) அல்லது Fab 2 என மாற வேண்டிய நிலை உள்ளது, ஆனால் இந்திய அணியின் பேட்டிங் இன்னும் நல்ல நிலைமையில் தான் இருக்கிறது, காம்பிர், விஜய், மிஸ்ரா என புதிதாக வந்தவர்களும் நல்ல போர்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விசயமாகவே நோக்க வேண்டும்...

உலக போலீஸ்காரன் அமெரிக்கா என்பது போல உலக கிரிக்கெட் தாதா, சண்டியர், முரடர்கள், etc.................. இன்னும் எப்படி வேண்டும்னாலும் நீங்கள் எழுதி கொள்ளுங்கள் என நினைத்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது எப்படியும் ஒரு பெருத்த அவமானமாகவே இருக்கும், முக்கியமாக கவரி மான் பரம்பரையை சேர்ந்த ரிக்கி பாண்டிங்க்கு இந்த தோல்வி ரொம்ப கசப்பாகவே இருக்கும் என்பது நிச்சயம், கடைசி டெஸ்ட் போட்டி மட்டும் ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால் எப்படியும் நடுவர்கள் துணை கொண்டாவது வெற்றி பெற்றிருப்பார்கள்... சென்ற முறை கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியர்கள் விளையாடிய விதம் எல்லாருக்கும் நினைவு இருக்கலாம்...

இந்திய அணிக்கு இந்த தொடரில் முக்கியமாக ஆக்ரோஷமான அணி தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார், கங்குலிக்கு பிறகு இந்திய அணிக்கு துணிச்சலான ஒருவர் தலைமை பொறுப்பை எடுத்துள்ளார், எனக்கு Mark Taylor மற்றும் Sharne Warne இருவரின் காப்டன்ஷிப் ரொம்ப பிடிக்கும் Attacking Captains, இப்போ ரொம்ப நாளைக்கு பிறகு இந்த மாதிரி ஒரு கேப்டன் கிடைத்துள்ளார்....

இப்படி பல காரணம் இருந்தாலும் இன்னொரு விடயத்தினாலும் இப்போட்டி தொடர் முக்கியமானது, நீண்ட நாளைக்கு பிறகு ஹர்பஜன் சிங்க் போட்டி தடை, தண்டம், எச்சரிக்கை இல்லாமல் முடித்துள்ளார் அதுவும் அவரது பரம வைரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.....



நீண்ட காலமாக விளையாடி வந்த கங்குலி, கும்ப்ளே (டிராவிட்ஐயும் சேர்க்க வேண்டி வரலாம்) வாழ்த்தி வழி அனுப்பி வைப்போம், புதிதாக வந்துள்ள விஜய், மிஸ்ரா போன்றோரை வரவேற்போம்.


Salute to Kapildev - (ICL) எனது பார்வையில்

கடந்த ஒன்றரை மாத காலமாக எனது மாலை நேர வேலைகளை ஒழுங்காக செய்ய முடியவில்லை, இதற்கு முக்கியமான காரணம் ICL போட்டிகள், பலருக்கு இது என்னவோ Cricket Board களால் ஒதுக்கப்பட்ட வீரர்களின் போட்டியாகத்தான் இன்னும் பார்கிறார்கள், ஆனால் தொடர்ந்து என்னை போல் இப்போட்டிகளை பார்த்து வரும் என்னை போன்றவர்களுக்கு, இந்தியாவில் இத்தனை காலம் இந்த அளவு வீரர்களை வைத்திருந்து, அவர்களை கவனிக்காமல் இன்னும் மூத்த வீரர்களையே வைத்து காலம் தள்ளிஇருந்தது புரியும், எத்தனையோ திறமை உள்ள வீரர்கள் இந்த போட்டிகளில் பிரகாசித்தும் இனி அவர்களுக்கு இந்தியா தேசிய அணியில் வைப்பு இல்லை என நினைக்கும் போது கவலை அளிக்கிறது..

என்ன தான் இந்தியா கிரிக்கெட் போர்டு முழு இந்தியா கிரிக்கெட் Control ஐ தன் கீழே வைத்திருந்தாலும் கபில் தேவ் என்னும் போராட்ட குணம் உள்ள வீரன் தான் எத்தனை பிரச்சனை வந்தாலும் தனியே போராடி இப்போட்டிகளை நடத்தி காட்டியது மட்டுமல்லாது பல இளம் வீரர்களை அடையாளம் காட்டியுள்ளார், Sothi, Ali Murthaza, Mishra, Rayudu, Binny, Vignesh, Sathis, Abbas Ali, Sharma என பல இளம் வீரர்கள் இங்கு தங்களது திறமையை காட்டுகின்றனர், எனக்கு Ali Murthza மற்றும் Reethindhar Sothi இருவரையும் அவர்களின் போராட்ட குணங்களுக்காக பிடிக்கும், கடைசி வரை போராடும் இவர்கள் Kapil Dev இன் Followers ஆக தான் நான் பார்க்கிறேன்....


என் முதல் பதிவு

எனக்கு எழுதும் ஆர்வம் சிறிய வயதிலிருந்தே இருக்கிறது, ஆனால் எதில் எழுதுவது என யோசித்திருந்த எனக்கு Blog ஒரு சிறந்த வாய்பாகவே அமைந்திருந்தது, ஆனால் எப்படி தொடங்குவது, இது சாத்தியமாகுமா என எல்லாம் நினைத்திருந்த நேரத்தில் தான் தமிழ் Unicode Typing எனக்கு பரிச்சயமானது, மேலும் Loshan இன்ட வலை பூவை பார்த்த பின் தொடங்கலாம் என ஒரு நம்பிக்கை வந்துள்ளது, எனவே தொடங்குகிறேன் எதையாவது எழுதி வைக்கலாம் என்ற முடிவோடு, இன்னும் எந்த விடயங்களை பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்யவில்லை, என்னை பாதித்தவைகளை என்னால் en நண்பர்களிடம் கதைக்க முடிந்தவைகளை இங்கு நான் பதிக்க விரும்புகிறேன்.....