ஹாப்பி பிரெண்ட்ஸ் டே !!!

பிரிந்து போன நட்பினை கேட்டால்
பிரியமான கதைகள் சொல்லும்..
பிரியமான காதலும் கூட பிரிந்த
பின் ரணமாய் மாறும்...
நட்பு நட்பு தான் காதல் காதல் தான்...

எனக்கு என்றுமே பிடித்தமான இந்த பாடல் வரிகள் சொல்லும் உண்மைகள் ஏராளம் ஏராளம், உன் நண்பனை காட்டு உன்னை அறிந்து கொள்ளலாம் என்பார்கள் அது எப்பொழுதும் உண்மையான விஷயம், என்ன தான் நாம் நல்லவர்களாக இருந்தாலும் நம் நண்பர்களை வைத்து தான் நம்மை எடை போடுவார்கள்.. என்னடா இவன் நட்பு நட்பு என மொக்கை போடுறான்னு திட்ட வேண்டாம்? இந்த ஞாயிற்றுகிழமை நண்பர்களுக்குரிய தினம்.. அதாங்க நம்ம நாளுங்க.. எப்படி காதலர்களுக்கு பெப்ரவரி 14 இருக்கோ, அது போல நமக்கு ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுகிழமை இருக்குங்க.. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதலாம் ஞாயிற்றுகிழமை பிரண்ட்ஸ் நாளாக கொண்டாடும் பழக்கம் 1935 ஆம் ஆண்டு தொடக்கம் இருந்து வருகிறது, அந்த வருடம் அமெரிக்க காங்கிரசால் நண்பர்களுக்கான பொது விடுமுறையாக அறிவிக்க பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட பட்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் மற்றும் சில அமைப்புகளில் வேறு நாட்களும் நட்புக்குரிய நாட்களாக கொண்டாட பட்டு வருகின்றது.
நண்பர்கள் தினம் - ஆகஸ்ட் முதலாம் ஞாயிற்று கிழமை பெண்களுக்குரிய நட்பு தினம் - ஆகஸ்ட் மூன்றாம் ஞாயிற்று கிழமை சர்வதேச நண்பர்கள் மாதம் - பெப்ரவரி மாதம் பழைய நண்பர்கள் புதிய நண்பர்கள் வாரம் - மே மாதம் மூன்றாம் வாரம்

இன்னும் சில நாடுகளில் ஜூலை இருபதாம் திகதியை நட்பு தினமாக கூறுகிறார்கள்.

நமக்கு நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சில பிரண்ட்ஸ் டே எஸ்.எம்.எஸ் கீழே தந்திருக்கிறேன் எடுத்து அனுப்பி உங்க நட்புகளை பெருமை படுத்துங்க..

----------------------------------------------------------------
A single candle can illuminate an entire room. A true friend lights up an entire lifetime. Thanks for the bright lights of ur friendship.
----------------------------------------------------------------

Friendship is never an accident...
it is something one has to nurture
over the years. I hope every year
our friendship becomes stronger

----------------------------------------------------------------

Friendship is not about finding similarities, it is about respecting differences. You are not my friend coz you are like me, but because i accept you and respect you the way you are.
----------------------------------------------------------------
Stars has 5 ends
Square has 4 ends
Trinagle has 3 ends
Line has 2 ends
but Circle of our friendship has no end.
----------------------------------------------------------------
Thank you for touching my life in ways you may never know. My riches do not lie in material wealth, but in having friend like you - a precious gift from God.
----------------------------------------------------------------
Good FRIENDS CaRE for each Other..
CLoSE Friends UNDERSTaND each Other...
and TRUE Friends STaY forever
beyond words,
beyond time...
----------------------------------------------------------------
What is a friend? She looks out 4 u, inspires u, laughs with u, cries with u, understands u, guides u and walks with u. That's what a friend is... u.
---------------------------------------------------------------

There is no Religion between Friendship
(\_/)
(=.=)
(")(")
This is for you...
Happy Friendship Day

---------------------------------------------------------------
A friend
is ALWAYS by your
side, to COMFORT
and GUIDE and bring
untold joys to LIFE
---------------------------------------------------------------
Friendship is a silent gift of nature..
More old .. more strong..
More deep.. more clear..
More close.. more warm..
Less words.. more understanding
---------------------------------------------------------------
Once u miss, u cannot join,that is Love .............
Once u join u cannot miss, thats Friendship............
---------------------------------------------------------------
Special number Stored in my Phone,
Special photos Fixed in my Album,
Special memories saved in my Brain,
Special Friend like u stays in my HEART
---------------------------------------------------------------
A Friend is a Hand Holding yours,
no matter how close or far apart you may be

---------------------------------------------------------------

என் உணர்வுகளை
என்னை விட நன்றாக
உணர்ந்த
உணர்கின்ற என் நட்புகளுக்கு
இந்த பதிவு சமர்ப்பணம்




என் தந்தையின் கணினியில் உள்ள நடிகை


-

-
கடவுளே தயவு செய்து என் தந்தையின் கணினியில் உள்ள பெண்களுக்கு உடைகளை கொடு.. பாவம் அவர்கள் உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள்



வருடம் 2070 இல் எழுதப்படும் ஒரு கடிதம்

" எனக்கு வந்த ஒரு ஈமெயில் இல், 2070 ஒரு தந்தை எழுதும் கடிதத்தை பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது, அதை எனக்கு புரிந்த விதத்தில் தமிழ் படுத்தியிருக்கிறேன், பிடித்திருந்தால் பின்னோட்டமும் ஓட்டும் போடுங்க தலைவா"









இது
2070 ஆம் ஆண்டு


நான் 50 வயதை எட்டி சற்று நாளாகின்றது , ஆனாலும் என் தோற்றம் கிட்ட தட்ட 85 வயதானவரை போல இருக்கின்றது... நான் சிறுநீரக (கிட்னி) வருத்தத்தால் ரொம்பவே அவதிபடுகிறேன். அதற்கு காரணம் நான் தேவையான அளவு நீரை அருந்தாமை ஆகும். இன்னும் ரொம்ப காலம் நான் உயிர் வாழ மாட்டேன் என கவலையாய் இருக்கிறது. ஆனாலும் நான் இந்த சமூகத்திலேயே ரொம்ப வயதானவன் என்கிற சந்தோஷமும் இருக்கிறது.

எனக்கு என் 5 வயது ரொம்பவே நன்றாக நினைவு இருக்கின்றது, அப்போதைய உலகம் ரொம்பவே வித்தியாசமானதும் கூட... பசுமையான நாட்கள் அவை.. பூங்காக்கள் நிறைய மரங்கள் இருந்தன. அழகான மலர் தோட்டங்களை எல்லா வீடுகளிலும் காணக்கூடியதாக இருந்தது. நான் அந்த நாட்களில் நான் அரை மணித்தியாலம் குளித்திருக்கிறேன். இப்போ நாங்கள் கனிப்பொருட்கள் நிரம்பிய எண்ணை மற்றும் டவல் மூலமாக தானே எங்கள் தோலை சுத்த படுத்தி கொள்கிறோம்...

அந்த காலங்களில் பெண்கள் தலையில் அழகான கூந்தல் இருந்தது, இப்போ தண்ணீர் கொண்டு சுத்த படுத்த முடியாததால் தலையை வழித்து கொண்டு மொட்டை தலை கொண்டவர்களாக அல்லவா இருக்கின்றோம். அந்த நாட்களில் என் தந்தை அவரது காரை குழாய் நீரை கொண்டு கழுவுவது வழக்கம், இதை என் மகனிடம் சொன்னால் நம்ப மறுக்கிறான், "நீரை இப்படி எல்லாம் வீணாக்குவார்களா" என என்னிடம் கேட்கிறான்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது அந்த காலத்தில் "நீரை சேமிப்போம்" என சுவர் விளம்பரங்கள், துண்டு பிரசுரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என எராளமான இடங்களில் விளம்பர படுத்தப்பட்டு இருந்தது, ஆனால் அப்போது தண்ணீர் என்பது அழிய கூடிய ஒன்றாக நங்கள் நினைக்கவில்லை. இப்போ ஆறுகள், ஓடைகள், குளங்கள், வாவிகள், நிலத்தடி தண்ணீர் எல்லாமே வறண்டு போய் விட்டது அல்லது அழிக்க பட்டு விட்டது.

உற்பத்தி துறை ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்து விட்டது, வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி விட்டது, இப்போதெல்லாம் உப்பிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் தொழில் சாலைகள் தான் வேலை தரும் முக்கிய நிறுவனங்களாக இருக்கிறன்றன, இவற்றிலும் அதிகமானோர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியாக குடிக்கும் நீரையே பெற்று கொள்கின்றனர்.

துப்பாக்கி முனையில் தண்ணீரை பறித்து கொண்டு போவது இப்போதெல்லாம் ரொம்பவே சகஜமாகி போய் விட்டது, உணவு என்பது 80% செயற்கை முறையானதாகவே இருக்கின்றது, முன்னெல்லாம் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியம் என கருதபட்டது, அனால் இப்போது எனக்கு 1/2 கிளாஸ் தண்ணீர் தான் வழங்கப்படுகிறது. நங்கள் இப்போதெல்லாம் பாவித்து வீசி எறியும் உடைகளையே பாவிக்கின்றோம், இது குப்பைகளை அதிகரித்து விட்டது.

குப்பை தொட்டிகள் போல் மலசலகூட கழிவுகளும் தொட்டிகளுக்கே போகும் மாதிரி தான் செய்து உள்ளோம், எனேன்றால் வேறு எந்த வகையிலயும் கழிவுகளை அகற்ற நீர் போதாமை என்கின்ற காரணத்தால் ஆகும்.

இப்போதைய மக்களின் வெளிப்புற தோற்றம் ரொம்பவே விகாரமடைந்து காணப்டுகின்றது, வயது போனவரை போன்ற தோற்றம், தோல் தடிப்படைதல், விகாரமான தோற்றம் என்பன மிகவுமே சாதரணமான விஷயங்களாகி போய் விட்டன, அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாகவே தோலை தாக்குவதால் தோல் புற்றுநோய் என்பது மிகவும் சாதாரணமாகி போய் விட்டது. சிறுநீரக பாதிப்பு தான் இன்றைய கால கட்டத்தில் மக்களின் இறப்புக்கான முக்கியமான காரணம் ஆகும்.

தோல் கலங்களின் இறப்பால் இருபது வயதானவர்கள் எல்லாம் நாற்பது வயதானவரை போல தென்படுகின்றனர். விஞ்ஞானிகள் எல்லாரும் இதற்கு வேறு வழிமுறைகளை கண்டறிய இரவு பகல் பாராமல் போராடுகின்றனர் ஆனாலும் என்ன செய்ய தண்ணீர் என்பது செயற்கையாக உருவாக்க முடியாத ஒரு பொருளாகவே இன்னும் இருக்கின்றது, ஒட்சிசன் கூட இப்போ ரொம்ப குறைந்து உள்ளது காரணம் மரங்கள் மற்றைய தாவரங்கள் ரொம்ப குறைவடைந்ததால் ஆகும், இதன் காரணமாக அடுத்து சந்ததி புத்தி வளர்ச்சி குறைவடைய எராளமான வாய்ப்புகள் உள்ளன.

மனிதனின் இயல்பு நிலை மாற்றம் அடைய தொடங்கி விட்டது, விகார நிலை அடைய தொடங்கி பிறக்கும் குழந்தைகள் எல்லாம் விகாரமாகி எதோ ஒரு குறையுடனும், அவயவங்களில் பிரச்சினைகளுடனும் பிறக்கின்றன.

அரசாங்கத்துக்கு நாங்கள் சுவாசிப்பதுக்கு வரி கட்டுகிறோம், ஒரு நாளைக்கு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒட்சிசனின் அளவு 137 m3 ஆகும். இந்த வரியை கட்டாதவர்களை அரசாங்கம் விசேட சுவாசிக்கும் பிரிவிலிருந்து வெளியேற்றி சாதாரண காற்றை சுவாசிக்கும் இடங்களுக்கு அனுப்புகின்றது, இங்கு மனிதனுக்கு சூரிய சக்தியில் மூலம் சுவாசிக்க காற்று வழங்க படுகிறது, இந்த பிரதேசத்தில் உள்ள காற்று மிகவும் தரமானதாக இல்லாவிட்டலும், உயிர் வாழ போதுமானதாக இருக்கும், மனிதனின் சராசரி ஆயுட்காலம் 35 வருடங்களாகும்.

இன்னும் மிக சில நாடுகளில் பசும் புல் வெளிகள் காடுகள் ஆறுகள் இருக்கின்றன அவை ஆயுதம் தரித்த ராணுவங்களால் பாதுகாக்க படுகின்றன. தண்ணீர் மிகவும் விலை உயர்ந்த பொருளாக மாறி விட்டது, இப்போதைக்கு தங்கம், வைரங்களை விட தண்ணீரே மிகவும் விலை உயர்ந்த பொருள் ஆகும். நான் வாழும் பிரதேசத்தில் எங்கயுமே ஒரு மரத்தை தானும் காண முடியாது, காரணம் இங்கு பெய்யும் அமில மழை.

இதற்கெல்லாம் காரணம் நங்கள் இயற்கையை பாதுகாக்காமல் விட்டதும் , அணு சக்தி பிரயோகமுமே ஆகும், எங்களை இயற்கையை பாதுகாக்க சொல்லி எராளமாக எச்சரிக்க பட்டோம், ஆனாலும் நங்கள் யாருமே அதை பற்றி சிந்திக்கவில்லை, என் மகன் என் காலத்தை பற்றி கேட்கும் போது பசும் புல் வெளிகள், மலர்களின் அழகு, மழை, நீச்சல், ஆறுகளிலும் குளங்களிலும் உள்ள மீன்கள் எவ்வளவு தேவையோ அவ்வளவு நீரை குடிக்கும் வசதி, மனிதர்கள் எவளவு சுக தேகியாக வாழ்ந்தார்கள் என எல்லாம் கூறினேன்

அடுத்து என்மகன் கேட்டான் "இப்போ ஏன் அப்படி தண்ணீர் இல்லை?" என, பதில் சொல்ல முடியாமல் என் தொண்டையிலுள்ள உள்ள தண்ணீர் வற்றி விட்டது, ...

காரணம் தண்ணீரை வீணாக்கி இயற்கையை அழித்து, இப்போதைய இந்த தண்ணீர் இல்லா காரணத்துக்கு மூலமான சந்ததியை சேர்ந்தவன் என்ற முறையில், பதில் சொல்ல வார்த்தை இல்லாமல் வெட்கி தலை குனிந்தேன். நாங்கள் செய்த தப்புக்கு எங்கள் பிள்ளைகள் பெரிய விலையை கொடுக்கிறார்கள். இப்போதைக்கு மனிதனின் வாழ் நாள் குறைந்ததுக்கு நானும் காரணம் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும்

இதை வாசிப்பதால் யாராவது ஒரு நிமிடம் இயற்கையை அழிப்பதில் நமக்கும் பங்கு உண்டு என நினைத்தால் என் பதிவுக்கு அர்த்தம் உள்ளது என நினைக்கிறேன்.....







சமிந்த வாஸ் - ஒரு வேக பந்து வீச்சு சகாப்தம்


Warnakulasuriya Patabendige Ushantha Joseph Chaminda Vaas என உலகத்திலேயே மிகவும் நீண்ட பெயரை கொண்ட கிரிக்கெட் வீரர் டெஸ்ட் போட்டிகளில் இன்று அவரது கடைசி பந்து வீச்சை வீசினார். அவர் தான் சமிந்தா வாஸ். அவரை பற்றிய ஒரு சிறு பதிவு.

நான் சிறுவனாக இருந்த காலங்களில் இலங்கை அணி 3 சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்தது. அப்போதைய வீரர்களில் அசங்க குருசிங்க, அர்ஜுன ரணதுங்க, சந்திக்க ஹத்துருசிங்க இப்படி யாராவது ப்ரோமதய விக்கரமசிங்க வுடன் ஆரம்ப பந்து வீச்சாளர்களாக இருந்து வந்தனர், அப்போதைய நேரங்களில் வாசிம் அக்ரம் உலகத்தையே தனது வேக பந்து வீச்சில் கலக்கி வந்தார், எங்களுக்கும் ஒரு இடது கை வேக பந்து வீச்சாளர் கிடைத்தால் எப்படி இருக்கும் என நினைத்து கொண்டிருந்த போது தான் சமிந்தா வாசின் அறிமுகம் அதுவும் அதே வாசிம் அக்ரம் விளையாடும் பாகிஸ்தான் அணிக்கேதிரகவே பாத்து வீச வைப்பு. அன்று முதல் இன்று வரை இலங்கை வேக பந்து வீச்சை சுமந்து வந்துள்ளார்.

இவரது சாதனைகள் சில

* உலகத்திலேயே மிக சிறந்த ஒரு நாள் பந்து வீச்சு பெறுதி 19 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கெட் எடுத்து ஆகும் இது ஜிம்பாபே அணிகேதிராக ஆகும்.
* ஒரு நாள் போட்டியின் முதல் 3 பந்து வீச்சிலேயே 3 விக்கட்டுகள் எடுத்து ஆகும், இந்த சாதனை வேறு யாருமே செய்தது இல்லை.
* மேற்கிந்திய தீவுகளுக்கு எதிர்ராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகள் எடுத்து, இது இலங்கை அத்தொடரை 3-0 என வெல்ல காரணமாக இருந்தது, அதோடு ஒரு போட்டியில் இவர் பெற்ற 14 விக்கெட்டுகள் இம்ரான் கானுக்கு பிறகு உப கண்டத்தில் இச்சாதனையை செய்த ஒரே வீரராக ஆக்கியது.
* 2004 இல் ICC முதன் முதலாக தெரிவு செய்த உலக டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பிடித்திருந்தார்.
* இலங்கை முதன் முதலாக மேற்கிந்திய தீவுகளில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல மிக முக்கியமாக போட்டி முடிய பதினாறே நிமிடம் இருக்கையில் சகல விக்கெட்டுகளையும் இலங்கை பெற காரணமாக இருந்து 5 விக்கெட்டுகளை பெற்றார், அத்துடன் இப்போட்டியில் முதலாம் இனிங்க்சில் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும் பெற்றார்.
*இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 3085 ஓட்டங்களையும் 354 விக்கெட்டுகளையும் , ஒரு நாள் சர்வதேச
போட்டிகளில் 2025 ஓட்டங்கள் மற்றும் 400 கும் மேற்பட்ட விக்கெட்டுகளை பெற்ற ஒரே சகல துறை வீரர் இவர் மட்டும் தான்.
* முரளிதரனுக்கு பிறகு இலங்கை அணியின் பது வீச்சு சாதனைகள் அனைத்தையும் கொண்டுள்ள வீரர்.
* விஸ்டன் 2008 ஆம் ஆண்டு சிறந்த விளையாடும் 40 வீரர்களில் ஒருவராக தெரிவு செய்ய பட்டர்.

நாளையோடு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு விடை கொடுக்க போகும் இந்த மகத்தான வீரருக்கு எங்களை இவளவு காலமும் தன் விளையாட்டு திறமையால் மகிழ்ச்சியில் ஆழ்த்தியமிகு நன்றிகளையும், அவரது எதிர் காலத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்வோம்.

** எதிர் காலத்தில் நேர்முக வர்ணனையளரகவோ, பயிற்றுவிப்பாளரகவோ உங்கள் சேவையை எதிர் பார்க்கிறோம்