நூடுல்ஸ் (25-06-2010) பீபா உலக கிண்ண ஸ்பெஷல்

http://yovoicee.blogspot.com/2010/06/25-06-2010.html

இந்த பதிவிற்கு தொடர்பு ...



நூடுல்ஸ் (16-06-2010)

நூடுல்ஸ் (16-06-2010)

http://yovoicee.blogspot.com/2010/06/16-06-2010.html


என் முதல் பதிவு (மீண்டும் நான்)

என் முதல் பதிவு (மீண்டும் நான்)



எனது புதிய வலை பக்கம்



என்ன செய்வது தெரியவில்லை?

நான் எனது மடிக்கணனியில்தான் இணைய பாவனை செய்வது வழக்கம். அதில் நான் இணைய பாவனைக்கு கூகுல் குரோமை மென்பொருளாக பாவித்து வந்தேன்.

நான் எனது எல்லா பாஸ்வேர்டுகளையும் குரொமில் சேமித்து வைத்திருந்ததால், வழமையாக எனது மின்னஞ்சல்கள், மூஞ்சி புத்தகம், புலோக் ஆகியவற்றிற்கு செல்லும் போது என்னிடம் கடவுச்சொல்லை குரோம் கேட்பது இல்லை. இது எவ்வளவு பெரிய வசதி என்று நினைத்திருந்த நான், எனது ஜீமெயில், யாகூ மெயில், பேஸ்புக் ஆகியவற்றின் பாஸ்வேர்ட்டுகளை யாரோ திருடி அதை மாற்றி என்னை அதற்குள் புகவிடாமல் தடுத்ததை தொடர்ந்து செய்வதறியாமல் இருக்கிறேன்.

ஏதொ எனது டிவிட்டர் கடவு சொல் மாத்திரம் களவு போகாமல் பாவிக்கும்படியுள்ளது. எனது யோ வொய்ஸ் புலோக்கிற்கு எனது வேறொரு மின்னஞ்சலை தொடர்புபடுத்தி வைத்திருந்தது இப்போது உதவியிருக்கிறது, ஆனாலும் என்னால் யோ வொய்ஸ் புலோக்கிற்கு சென்று செட்டிங்குகளை மாற்ற இயலாது.

என்னால் முடிந்தளவு யாகூ, கூகுல், பேஸ்புக் ஆகியவற்றுக்கு முறையிட்டும் பலனில்லை.

எனது யாகூ மெயில், ஜீமெயில், பேஸ் புக் ஆகியவற்றை மீட்டு தர யாராவது வழி சொல்லமுடியுமா?



I can't access my email

testing post


இலங்கை பதிவர்களை காணவில்லை

தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. தொடர்ந்து எழுதும் ஒரு சிலரை தவிர மற்றவர்களும் ஏதோ ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவையும் எழுதுகின்றனர். 

“என்ன கொடுமை சார்” சொல்வதை போல் யாரையும் எழுத நிர்பந்திக்க முடியாவிடினும் பதிவுலகத்தை விட்டு கொஞ்ச காலம் விலகியிருக்க எண்ணியிருந்தால், அந்த கொஞ்ச காலம் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்து, பதிவெழுதும் எண்ணமே கைவிட்டு போய்விடலாம் என்ற அனுபவம் தனிப்பட்ட அனுபவம் இருக்கிறது. 

எல்லா பதிவர்களும் இப்படி யோசித்து ஒதுங்கியிருந்தால், பல பதிவர்களை நாம் இழக்கவேண்டியிருக்குமோ என்னும் பயம் எனக்கு வந்துள்ளது. சமீபத்தில் இலங்கை பதிவர்கள் நல்ல போர்மில் இருந்த கால கட்டமாக நான் நினைப்பது, பதிவர் சந்திப்புகளிற்கு முன்னரும், பின்னருமான கால கட்டங்களாகும். 

பதிவர்கள் சிலரோடு கதைத்த போது இன்னுமொரு சந்திப்பு இருந்தால் நன்றாக இருக்குமென அவர்களும் நினைக்கிறது புரிகிறது. ஆக மீண்டும் ஒரு பதிவர் சந்திப்புக்கு யாராவது ஏற்பாடு செய்தால், இழந்த போர்மை பலரும் பெறலாம் என நினைக்கிறேன், ஆனால் “பூனைக்கு யார் மணி கட்டுவது?”. யாராவது ஒரு பதிவர் தொடங்கி வைத்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். யாராவது ஒரு பதிவர் முன்வரலாம். முன் வந்தால் ஏற்கனவே சந்திப்புகளை ஏற்பாடு செய்த குழு அவர்களுக்கு உதவுமென நினைக்கிறேன்.

முன்னைய இரண்டு சந்திப்புகளையும் தொடர்புபடுத்திய பதிவர் வந்தியத்தேவன் இப்போது இலங்கையில் இல்லாமையினால் அந்த தொடர்புபடுத்தும் பொறுப்பை சின்ன வந்தி விரும்பினால் செய்யலாம் என நினைக்கிறேன். கோபியை நான் ஏற்பாடு செய்ய சொல்லவில்லை, தொடர்புபடுத்த (Coordinator) விரும்பினால் நல்லாயிருக்குமென நினைக்கிறேன். நான் இணைந்து சந்திப்பை ஏற்பாடு செய்ய விரும்பினாலும் நான் இருப்பது கண்டியில் என்பதாலும் அதிகமான பதிவர்கள் கொழும்பிலிருப்பதாலும் அது சாத்தியமில்லை என நினைக்கிறேன்.

இப்போதைக்கு சந்திப்பு நடாத்த இயலாவிட்டாலும், இரண்டாவது சந்திப்பில் கௌபோய் மது சொல்லியபடி “கூகுல் குழும அரட்டையில்”   ஒரு சந்திப்பை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன். 

யாராவது ஏற்பாடு செய்யுங்களேன், சந்திப்போம்.

பி.கு. - இன்று பிறந்த நாளை கொண்டாடும் மூத்த பதிவர் கவிஞர் மேமன் கவி ஐயா அவர்களுக்கு எனது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்



சுறாவும் பதிவலகும்

சுறா வி.ஐ.பி காட்சிக்கு ஒரு டிக்கட் கிடைத்துள்ளது, ஆனாலும் இதற்காக மட்டும் கொழும்பு சென்று பார்த்துவிட்டு வருவது இப்பிசியான காலகட்டத்தில் எனக்கு கடினம் என்பதால் செல்லவில்லை. 




ஆனாலும் எப்படியும் இந்த வாரமே படத்தை பார்த்துவிட வேண்டும் காரணம், வழமையாக விஜய் படம் வந்தால் பதிவுலகம் விஜய் பற்றிய பதிவுகளை போட்டு நிரப்பி படத்தை விமர்சிக்கிறேன் என முழு கதையையும் சொல்லிவிடுவார்கள். எங்களது வீட்டில் அம்மா மற்றும் சிறு வாண்டுகள் அனைவருக்கும் ரஜனி படத்திற்கு பிறகு விஜய் படம் பார்க்கதான் கொள்ளைப்பிரியம். அவர்களுடன் சென்று பார்க்க வேண்டும். எனக்கும் விஜய் படம் பெரிய ஏமாற்றத்தை தந்ததில்லை காரணம் விஜய் படத்திற்கு உலக தர படத்தை பார்க்கும் எதிர்பார்ப்போடு நான் செல்வதில்லை. கமல் படத்திற்கு செல்லும் போது நான் விஜயிடம் எதிர்பார்ப்பதை அங்கு தேடுவதில்லை.


ஆனாலும் 75 வீதமான பதிவுகள் நாளை முதல் விஜயை திட்டி வெளிவரும். பலவற்றில் விஜய் என்பவரை விமர்சிப்பதையே முக்கிய கடமையாக கொண்டிருக்கும். 


பையா படத்தில் கார்த்தி பலரோடு பறந்து சண்டை போடுவதை ரசித்த பலரும், ஆதவனில் சூர்யாவின் சாகசங்களை ரசித்தவர்களும், அசலில் அஜித்தின் ஹீரொயிசத்தை ரசித்த பலரும் குருவியில் விஜய் சண்டை போடுவதை விமர்சித்திருப்பர், காரணம் விஜய் என்னும் நடிகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக. காரணம் பலருக்கு விஜய் பற்றி விமர்சிப்பது பேஷனாகி போய் விட்டது.

பி.கு.
பதிவுகளை வாசிக்கும் விஜய் ரசிகனான எனது நண்பனொருவன் என்னிடம் சொல்லியவை, இவை யோசித்து பார்க்கும் போது உண்மையாகவே தெரிகிறது.

பி.பி.கு
நான் விஜய், அஜித், கமல், ரஜனி யாருடைய ரசிகனுமில்லை, எனக்கு எல்லாரது படமும் பிடிக்கும். நான் ஏ.ஆர். ரகுமானின் இசைக்கு மட்டும் தீவிர ரசிகன் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்.




நூடுல்ஸ் (ஐயம் பெக்)

தேர்தல், பண்டிகை விடமுறை முடிந்து பழையபடி எல்லாரும் தமது வேலைகளுக்கு திரும்பி விட்டனர். புது அரசாங்கம், புது அமைச்சர்கள் என நாடு பழைய மாதிரியே பயணிக்கிறது. கொஞ்ச காலமாக எனது இணைய தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பதிவு எழுதாவிடினும் அநேகமாக எல்லாரது பதிவுகளையும் வாசித்து வந்தேன். சிலவற்றுக்கு பின்னூட்டமும் இட்டேன், இனி அடிக்கடி பதிவுகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு மாதிரி ஐ.பி.எல் காய்ச்சல் முடிந்து விட்டது, நான் அதிகமாக ஐ.பி.எல்லை பார்க்கவில்லை, காரணம் எனக்கு 20-20 கிரிக்கட் போட்டிகளை பற்றி பெரிதாக நல்ல அபிப்பிராயம் கிடையாது, அதிலும் பணம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்கமாக கொண்ட இத்தொடர் பற்றிய நல் அபிப்பிராயம் சுத்தமாக கிடையாது எனலாம். நான் ஏற்கனவே ஐ.பி.எல் என்னும் கிரிக்கட் வியாபரம் பற்றி கூறியதை எதிர்த்தவர்கள் இப்போது லலித் மோடியை பதவியிலிந்து நீக்கிய விடயம் அறிந்ததும் வாயடைத்து போய் இருக்கின்றனர், ஆனாலும் இப்போது பலர் லலித் மோடியை விமர்சிப்பதற்கான முக்கிய காரணம் பொறாமை ஆகும். பல ஐ.பி.எல் போட்டிகளின் முடிவுகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததாக வெளிவரும் செய்திகளை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். அப்படி எந்த வீரராவது பணம் வாங்கி போட்டியை விட்டு கொடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வீரர்கள் யாராக இருந்தாலும் வாழ்நாள் கிரிக்கட் விளையாட முடியாமல் தடை செய்யப்பட வேண்டும். ஐபிஎல் கிரிக்கட் விளையாட்டில் ”புக்கிகள்” போட்டி முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக வெளிவரும் தகவல்களை ஐசிசி விசாரித்து அவற்றுக்கு தடை கொண்டு வரவேண்டும்.


20-20 உலக கிண்ணம் தொடங்க இருக்கிறது, ஏதாவது அதிர்ஷம் உள்ள அணி கோப்பையை கைப்பற்றும். ஆனாலும் இலங்கை வென்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் யார் கிண்ணத்த கைப்பற்றுவர் என????

-----------------------------------------------------------------------------------------------------------------------

”வந்தி”யில்லாத இலங்கை பதிவுலகும், ”லோஷனி”ல்லாத விடியலும் ரொம்பவே போரடிக்கின்றன. மாலை வேளைகளில் மழை வந்து வெளியே போக விடாமல் செய்வதால், இப்போதெல்லாம் நான் அதிகமாக பாட்டு கேட்பதிலேயே எனது பொழுதுதை களிக்கின்றேன். “விண்ணைத்தாண்டி வருவாயா” மற்றும் ”பையா” பாடல்கள் அதிகமாக கேட்ட பாடல்களாகும். ”ராவண்” (தமிழ்) பாடல்களை கேட்க ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். முதல் காரணம் பாடல்களுக்கு இசையமைப்பு நம்ம தல ரகுமான். இரண்டாவது காரணம் இயக்குனர் மணிரத்தினம். இவர் இசையமைப்பாளர்களிடம் எப்படி சிறந்த பாடல்களை வாங்குவது என்னும் கலையை நன்றாக கற்றவர். அன்றைய அஞ்சலி, நாயகன், மௌனராகமாகட்டும் இன்றைய ஆய்த எழுத்து, குருவாகட்டும் மணிரத்தினத்தின் பட பாடல்கள் என்றுமே சோடை போனதில்லை.

”அடடா மழைடா, அடை மழைடா” பாடல் ”என் காதல் சொல்ல நேரமில்லை” என நா. முத்துக்குமார் எம்மை கவி மழையில் நனைய வைத்து விட்டார். தாமரை, நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களை எப்போதும் ரசிக்கலாம். இன்றைய தலைமுறையின் மனம் கவர் பாடலாசிரியர்கள் இவர்களேயாகும். 
-----------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து பதிவுகள் எழுதிய இலங்கை பதிவர்கள் பலரும். இப்போது அவ்வாறு எழுதுவதில்லை. இப்போது வரோ, சதீஷ் , பவன் போன்ற சிலரே அடிக்கடி எழுதுகின்றன. தமிழக பதிவர்களும் சங்கம் அமைக்க போய் தமக்குள் தர்க்கம் ஏற்படுத்தியது கவலையான விடயம். காரணம் தமக்குள் பொறாமை இல்லாத ஒரே குழுவாக நான் பார்ப்பது பதிவர்களையாகும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பதிவர்கள் வேறுபடாமலிக்க வேண்டும். அதுதான் பதிவுலகிற்கு நல்லதாகும்
-----------------------------------------------------------------------------------------------------------------------

ம்ம்ம். அமீர்கான் மச்சமுள்ள மனுஷன்

அடிக்கடி எழுதலாம் என்னும் நம்பிக்கையுடன் விடைபெறுகின்றன



நான் ரசித்த கிரிக்கட்டூன்கள்

பதிவு எழுத முடியாமல் எனது இணைய இணைப்பில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதனால் ஒரு பட பதிவு. நான் ரசித்து சிரித்த சில கிரிக்கட் கார்ட்டூன்கள்



















நூடுல்ஸ்

நித்தியானந்தா சாமியாரின் லீலைகள் அம்பலமாகியவுடன் பல ஊடகங்கள் கூக்குரலிட்டு போலி சாமியாரின் லீலைகள் அம்பலமாகிவிட்டன தெரிவிக்கின்றன, ஆனால் இந்த போலி சாமியார்களை உருவாக்குவதில் முக்கிய பங்கை இந்த ஊடகங்கள் வகிப்பதை மறந்துவிட்டன. குமுதம் இவரை வளர்த்திருக்காவிட்டால் இந்த நித்தியானந்தா உலகுக்கு தெரியாமல் போயிருப்பார். இலங்கையை பொருத்த வரையில் நித்தியானந்தரை விட சும்மா பகவான் எனும் இன்ஸ்ட்ண்ட் கடவுள்தான் பிரபலமாயிருக்கிறார். இவரை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் ஏதொ உலகை இரட்சிக்க வந்த உத்தமர் போல் புகழுவதை கண்டால் எரிச்சலாய் இருக்கிறது.
மக்களை வழி நடத்த சிறந்த ஆயுதமான தொழிநுட்பத்தை கொண்டுள்ள இவ்வுடகங்கள் அதை பயன்படுத்தி மக்களை நல்வழிப்படுத்தாமல் சும்மா பகவான் புகழ் பாடுவது வேதனைக்குறியது. இல்லை பணம் கிடைப்பதால்தான் சும்மா பகவானை புகழுகிறோம் என்றால் பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்களுக்கும் இவ்வுடகங்களுக்கும் என்ன வித்தியாசம்?

பதிவுலகில் விழிப்புணர்வு பற்றிய பதிவுகள் அதிகம் வந்தாலும் இன்னும் பதிவுலகம் இன்னும் மக்களிடம் போய் சேரவில்லை என்பதால் மக்களை விழிப்புணர்வு செய்யும் முக்கிய பணி வெகுஜன ஊடகங்களுக்கு உண்டல்லவா? இன்னும் சில பத்திரிகைகள் சாய்பாபா புகழ் பாடுகின்றன. எப்போது நம்ம தமிழர்கள் உயிருள்ள மனிதர்களை வணங்குவதை விடப்போகிறார்களோ தெரியவில்லை.

----------------------------------------------------------------------------------------------------
மேற்கிந்திய சிம்பாவே முதலாவது ஒருதினப் போட்டியில் சிம்பாபே வெற்றி பெற்றதும், சிம்பாவே (பலமான?) மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு நாள் தொடரில் வென்றிடும் என நினைத்தால் அடுத்துவரும் போட்டிகளில் சிம்பாபே மண் கவ்வியது. இதே போல்தான் அவுஸ்திரேலிய நியுசிலாந்து முதல் போட்டியில் நியுசிலாந்து வென்றதும் இத்தொடரில் நியுசிலாந்து அவுஸ்திரேலியாவுக்கு நல்ல போட்டியை கொடுக்கும் என எதிர்பார்த்தால் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியா இலகுவாக வென்றது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு கிடைத்த தண்டனைகள் கொஞ்சம் அதிகமாக தோன்றினாலும் கிரிக்கட் என்னும் கனவான்களின் விளையாட்டை சிதைத்த வீரர்கள் அதற்குறிய தண்டனையை ஏற்று கொள்ளதான் வேண்டும், பல முன்னணி வீரர்ளை தண்டனைக்குற்படுத்திய பாகிஸ்தான் கிரிக்கட் போர்டுக்கு பாராட்டுக்கள். காரணம் ஆசியாவிலுள்ள கிரிக்கட் சபைகள் வீரர்களை முதன்மையாக கொண்டே இயங்குகையில் இவ்வீரர்கள் இல்லாவிட்டால் போட்டியில் தோற்றாலும் பரவாயில்லை என பல முன்னணி வீரர்களுக்கு தண்டனை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை பாராட்ட தகுந்ததே
----------------------------------------------------------------------------------------------------
வேலை தேடி ஒரு முன்னணி அரசியல்வாதியிடம் சென்ற பட்டதாரி மாணவர்களை அவ் அரசியல்வாதி வேலை வேண்டுமாயின் தனது தேர்தல் வேலைகளை செய்யுமாறும் அதில் திருப்தி ஏற்பட்டால் தகுந்த வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதுதான் இலங்கையின் ஜனநாயகமா? இப்படி அரசியல் செய்வதை பார்க்க அம்மாதிரியான அரசியல்வாதிகள் பிச்சை எடுத்து சாப்பிடலாம்.
----------------------------------------------------------------------------------------------------
விண்ணைதாண்டி வருவாயா பார்த்தேன். கௌதம் தனது கதை சொல்லும் ஸ்டைலில் செதுக்கியிருக்கிறார். இசைப்புயல்தான் இப்படத்திற்கு உயிர் நாடி என்று சொலல்லாம். மிகவும் அழகாய், ஆர்ப்பாட்டமில்லாமல் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சியாகவிருந்த்து, அப்புறம் சிம்பு, மனுஷன் இந்தளவு நடிப்பு திறமையுள்ளவரா என வியந்தேன், இவ்வாறு இன்னும் 2,3 படங்கள் நடித்தால் நான் சிம்புவின் தீவிர ரசிகராகிவிடுவேன், மன்மதனுக்கு பிறகு சிம்பு நடித்த படங்களில் நான் ரசித்த்து விண்ணைதாண்டி வருவாயா மட்டுமேயாகும். நீண்ட நாட்களுக்கு பின்னர் தியேட்டரில் ரசித்து பார்த்த காதல் கதை இதுதான் என நினைக்கிறேன்.
----------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவுலகில் நான் வியக்கும் ஒரு நபர் கன்கொன் எனப்படும் கோபி. காரணம் சென்ற பதிவை நான் பதிவிட்டு திரட்டிகளில் இணைக்க முன்னரே அப்பதிவிற்கு வாக்கு போட்டு, பின்னூட்டம் போட்டு முடித்து விட்டார். மனுஷன் எப்படிதான் இவ்வளவு விரைவாக பின்னூட்டம் போடுறாரோ தெரியவில்லை. எனது சமீபத்திய எல்லா பதிவுகளுக்கும் முதல் பின்னூட்டம் அவரிடமிருந்துதான் வந்தாலும் கோபி மேல் எனக்கு ஒரு கோபமுண்டு. அந்த மனுஷனின் நகைச்சுவை பதிவுகளிற்கு நான் ரசிகன், ஆனால் இப்போ முன்னரை போல் நகைச்சுவை பதிவுகளை போடாத கன்கொனுக்கு எனது கண்டனங்கள்
----------------------------------------------------------------------------------------------------





ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 2)

இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் கொண்ட தொடரை விளையாட வேண்டிய இலங்கை அணி, அங்கு சென்று விளையாட வில்லை. காரணம் முன்னணி வீரர்களான மகேல, சங்கக்கார, முரளி போன்றோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறி அத்தொடரை இரத்து செய்துவிட்டனர்.

அதிக காலம் இங்கிலாந்திற்காக விளையாடி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். 1000 டெஸ்ட் விக்கட்டுகளை பெற்று சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி. இந்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போகிறாராம், ஆனால் தொடர்ந்து ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டிய லசித் மாலிங்க கடந்த இரண்டு வருடங்கள் முழுமையாக விளையாடியது ஐ.பி.எல் தொடர்களில் மாத்திரம் தான். தனது நாட்டுக்காக விளையாடாமல் பிரெட் லீ ஐ.பி.எல. தொடரில் விளையாட விரும்புகிறார்


இவற்றை பார்க்கும் போது சர்வதேச வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும், ஐ.பி.எல்லில் விளையாடுவதை விரும்புவதாக தெரிகிறது, ஆனால் இதை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. காரணம்

1. அதிக பிரபலமல்லாத திறமையுடைய வீரர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
உதாரணமாக சங்கக்கார, மகேல, முரளி, டில்சான் போன்ற 4 அல்லது 5 பேர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி கொடுக்கப்போகும் விலை. அந்த அணியின் வீரரும் உலகிலுள்ள மிக சிறந்த விக்கட் காப்பாளருமான பிரசன்ன ஜயவர்தனவுக்கு இந்த காலப்பகுதியில் விளையாட போட்டிகள் கிடைக்காமல் போவதால் அவரது போர்ம் மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அவரது திறமை மங்கிப் போகலாம்.


2. FTP யில் மாற்றங்களை ஏற்படுத்தால் பல நாடுகளுக்கு சர்வதேச போட்டிகள் இல்லாமல் போதல்.
சர்வதேச கிரிக்கட் அட்டவணையை மாற்றம் செய்வதால் அந்த காலப்பகுதியில் பல நாடுகளுக்கு போட்டிகள் அற்றுப்போதல். இதில் முக்கியமாக பாதிக்கப்பட போவது அதிகம் பிரபலமல்லாத அல்லது தனது ஒரு வீரரேனும் ஐ.பி. எல் தொடரில் விளையாடா சிம்பாபே, பங்களாதேஷ் போன்ற அணிகள்.

3. பந்து வீச்சாளர்கள் என்பவர்கள் ஓட்டங்களை கட்டுபடுத்துபவர்கள் மாத்திரமே என்னும் நிலை ஏற்படலாம். 
இன்னும் என்னை போன்ற பலருக்கு டெஸ்ட் போட்டிகள் பிடிக்க காரணம், அதிலுள்ள ஜீவன். திறமையுள்ளவாகள் மாத்திரமே அங்கு தொடர்ந்து சாதிக்கலாம். சச்சின் 20 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு காரணம் அவரது திறமை, ஆனால் திடீரெ னஒரு யுசுப் பதான் சச்சினை விட சிறந்த ஆட்டக்காரராக 20-20 போட்டிகளில் உருவகப்படுத்தப்படலாம், ஆனால் டெஸ்ட் போட்டி என வரும் போது யுசுப் பதானால் அவரது அதிரடியை மாத்திரம் கொண்டு சச்சின் போல் எதுவும் சாதிக்க இயலாது. காரணம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. 

மார்க் டெயிலர் தலைவராக இருந்த போது துடுப்பாட்ட வீரரை சுற்றி 6 பீல்டர்களை நிக்க வைத்து ஷேர்ன் வோனை பந்து வீச அழைத்து விக்கட்டுகளை கைப்பற்றியது போன்று 20-20 போட்டிகளில் ஷேன் வோர்னால் விக்கட்டுகளை பெற இயலாது காரணம் அவருக்கு பந்து தடுப்பாளர்களை விருப்பப்படி வைக்க முடியாது. அந்தளவுக்கு பந்து வீச்சாளரை கட்டுப்படுத்தி கிரிக்கட்டை துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமான விளையாட்டாக 20-20 போட்டிகள் மாற்றியது. 

மேலும் எந்த பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து அநாயாசமாக அடித்து ஆடலாம் காரணம் பீல்டிங்கில் உள்ள கட்டுபாடுகள். முரளியின் விக்கட் எடுக்கும் போர்ம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஐ.பி.எல்லில் அவரை எதிர்த்து துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றதையாகும்.

4. அணி உரிமையாளர்களான பணக்காரர்கள் கிரிக்கட் வீரர்களை தங்களுக்கு வேண்டிய விதத்தில் விளையாட சொல்வது.

ஷாருக்கான் சொல்படி பொன்டிங், கிறிஸ் கெயில், இஷாந் சர்மாவும், விஜய் மல்லையாவுக்கு தேவையான படி காலிஸ், பீட்டர்சன், ட்ராவிட், கும்ளே விளையாடுவதும், சங்கக்கார, மகேல, யுவராஜ் போன்றோருக்கு பிரீத்தி ஷிந்தா போன்றோர் கிரிக்கட் பயிற்றுவிப்பதும் கிரிக்கட்டுக்கு நல்ல எதிர்காலமாக எனக்கு தெரியவில்லை.

இன்னும் சில விபரங்கள் அடுத்த பகுதியில்



ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 1)


2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் நோக்கோடு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய கிரிக்கட் அணி, அப்போதைய ரேட்டிங்கில் கடைசியிடத்திலிருந்த பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டு போட்டி தொடரிலிருந்து விலகி நாடு வந்த்தும் ரசிகர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “ஏன் இவர்களை விட நன்றாக விளையாடகூடிய வீரர்கள் நாட்டில் இல்லையா”. மேலும் முன்னணி வீரர்கள் விளம்பரம் நடிக்கும் நேரமளவுக்கு கூட கிரிக்கட் பயிற்சியிலீடுபடவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.



உலக கிண்ணத்தை 1983இல் இந்தியாவுக்கு கொண்டு வந்த தலைவரான கபில்தேவ், சிறந்த பல இளம் வீர்ர்களை சர்வதேச அளவுக்கு கொண்டு வருவதாக சூளுரைத்து, அந்த காலத்தில் இந்தியாவிலுள்ள பல இளம் கிரிக்கட் வீரர்களையும், சர்வதேச வீரர்களையும் கொண்டு உருவாக்கியதுதான் ஐ.சி.எல். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் கடையில் உடை வாங்க சென்றாலும் அந்த நிகழ்வை விற்று காசு சம்பாதிக்கும் இந்திய கிரிக்கட் சபைக்கு கபில் தேவின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஐ.சி.எல்லினால் இந்திய கிரிக்கட் சபைக்கு “பெரியளவில் எந்த வருமானமும் இல்லாத்தாகும். இதனால் இந்திய கிரிக்கட் சபை அந்த லீக்கில் விளையாடும் வீரர்களை தடைசெய்த்து மட்டுமல்லாது, தனது பணபலத்தை வைத்து ஐ.சி.சியை பணிய வைத்து ஐ.சி.எல்லில் விளையாடிய சர்வதேச வீரர்களை சர்வதே போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைத்த்து. ஆனாலும் இம்முறையை கைகொண்டு இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை கண்டறிந்த இந்திய கிரிக்கட் சபை தொடங்கியதுதான் ஐ.பி.எல்.



ஐ.பி.எல். தொடங்கும் போது அதற்கு சொல்லப்பட்ட காரணம் இளம் இந்திய வீரர்களது திறமையை வளர்ப்பதற்கு என்பதாகும். இதற்கு தலைவராக திறமையான வியாபாரியான லலித்மோடியை களத்தில் இறக்கியது, இதற்கு முக்கிய காரணம் லலித்மோடி கிரிக்கட் வாரியத்தில் சேர்ந்ததன் பின்னர் இந்திய கிரிக்கட் வாரியத்தின் வருவாய் 7 மடங்காக அதிகரித்த்து. தேர்ந்த வியாபாரியான லலித் மோடி இந்த கிரிக்கட் வியாபாரத்தை நன்றாக திட்டமிட்டு இலாபகரமாக மாற்றுவார் என்பதை அறிந்துதான் தலைமை பதவியை அவருக்கு வழங்கினார்கள், அவர்களை லலித் மோடியும் ஏமாற்றவில்லை

பணம் கொழிக்கும் 8 முக்கிய நகரங்களை அடிப்படையாக வைத்து 8 அணிகளை உருவாக்கி அதை ஏலம் விட்டு பெரும் வருமானத்தை பெற்றார். கிட்டத்தட்ட ஒரு அணி 67-112 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது. அதிக பட்சமாக மும்பாய் அணி 111.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தாலும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணி 67 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனத்தாலும் வாங்கப்பட்டது. இவ் ஏலத்தினால் இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலே வருமானம் கிடைத்துள்ளது. மேலதிகமாக 10 வருடங்களுக்கு உத்தியோக புர்வ ஊடகமாக தெரிவு செய்யப்பட்ட சோனி நிறுவனம் 1.026 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. தலைப்பில் (DLF IPL) தனது பெயரை போட்டு கொள்ள DLF  நிறுவனம் ஐந்து வருடத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நடுவர்களின் அனுசரனையாளர்களான கிங்பிஷர் நிறுவனம் 5 வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்மேலும் ஹீரொ ஹொன்டா நிறுவனம் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெப்சிகோலா நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளது.

இத்தனை மில்லியன் டொலர்களை இலாபமாக குவித்த இந்திய பிரிமியர் லீக்கும் இந்திய கிரிக்கட் சபையும் உலக கிரிக்கட்டுக்கு வழங்கியது என்ன வென அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்





நூடுல்ஸ்

நேற்றிரவிலிருந்தே நித்தியானந்தா பரமஹம்சர் என்ற கழிசடை சாமியாரை பற்றிய பதிவுகள், ருவிட்டுகள் இணையத்தில் அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. தனிப்பட்ட ரீதியில் சன் டீவி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியதற்கு ஏதாவது அரசியல் காரணங்கள் இருக்கலாம், இருக்கவும் வேண்டும். 

இந்தளவிற்கு இப்படி பட்ட ஆட்களை சிகரத்தில் ஏற்றி வைப்பதும் ஊடகங்கள்தான், அவர்களை திடீரென்று அதால பாதளத்திற்கு தள்ளி விடுவதும் இதே ஊடகங்கள்தான். இப்போது பிரச்சினை சாமியாரோ, நடிகையே அல்ல. இந்த ஜென்மங்களின் காலை தொட்டு கையை தொட்டு வணங்கும் முட்டாள் பக்தர்கள்தான். சாமியாரின் பாலியல் தேவையை தனக்கு தேவைப்பட்ட ஒருத்தருடன் தீர்த்து கொண்டது ஒரு பெரிய குற்றமல்ல, காரணம் அந்தாளும் ஒரு சாதாரண மனிதர்தானே. அப்படி இருக்கும் போது ஏன் சாதாரண மனிதர்களை வணங்குகிறார்கள் என்பதுதான் இங்கு முக்கிய கேள்வி. மற்றபடி அடுத்தவர் படுக்கையறையில் நடப்பதை தொலைகாட்சியில் காட்டுவது என்பது அநாகரீகத்தின் உச்சக்கட்டம். ஆனால் சாதாரண மனிதனான ஒருத்தனை கடவுள் ஸ்தானத்திற்கு கொண்டு சென்றது யார் பிழை? முதல் பிழை ஊடகங்கள்தான் என்பது எனது கருத்து. 

இந்த சாமியார் இவ்வளவு பிரபல்யமாவதற்கு எழுத்தூடகமான குமுதம் தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? சாதாரண ஆசா பாசம் கொண்ட மனிதனை கடவுளாக சித்தரித்துடன் மாத்திரமன்றி அவர்களுக்கு அறிவுரையும் வழங்க வழி ஏற்படுத்தி கொடுத்தற்காக தனது வாசகர்களிடம் மன்னிப்பு கேட்குமா? 

இலங்கையிலும் அம்மா பகவான் பற்றிய கட்டுரைகள் தேசிய பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இது எவ்வளவு காலத்திற்கு என தெரியாது???

விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய ஊடகமே போலி சாமியார்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதா?

சாமிகளே உங்களது ஆசைகளை தீர்த்து கொள்வது பிழை என சொல்லவில்லை, தயவு செய்து மதத்தை வைத்து ஏமாற்றாதீர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யாராலும் எட்ட முடியாத ஒரு நாள் போட்டியொன்றில் இரட்டை சதம் பெறும் சாதனையை சச்சின் முறியடித்து ஒரு நாள் போட்டியில் 200 ஓட்டங்களை பெற்றுவிட்டார். பல கிரிக்கட் சாதனைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் இந்தளவிற்கு முன்னேறியதற்கு அவரது தன்னடக்கமும் ஒரு காரணம் என நினைக்கிறேன். 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் சச்சின் மற்றைய சமகால இந்திய வீரர்களை போல பிரச்சினைகளை சந்திக்காததும் அந்த மாபெரும் வீரரின் தன்னடக்கத்திற்கு சாட்சிகளாகும். தோனி கொஞ்சம் இடம் கொடுத்திருந்தால் சச்சின் இன்னொரு 20-25 ஓட்டங்களை எடுத்திருக்கலாம் என நினைக்கிறேன்

சச்சினின் பேட்டிங் சாதனைகளும் முரளியின் பந்து வீச்சு சாதனைகளும் நீண்ட காலத்திற்கு அழியாமலிருக்கும் என நினைக்கிறேன். 

ஐ.பி.எல் பணத்திருவிழா தொடங்க போகிறது. லலித் மோடி என்ற பண முதலைக்கு அடுத்த மாதம் நல்ல இலாபம் கொழிக்க போகிறது. ஐ.பி.எல்லின் மறுபக்கம் பற்றிய ஒரு பதிவு அடுத்த வாரம் போடலாமென நினைத்திருக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சிலி நாட்டில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தின் பயங்கரங்களை தொலைக்காட்சியில் பார்த்த போது 2012 படம் நினைவுக்கு வந்தது, இனியும் மனிதன் இயற்கையை எதிர்த்து தொழிற்படுவானாயின் எதிர்காலத்தில் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும். 


----------------------------------------------------------------------r--------------------------------------------------------------------------------------------
இலங்கை முன்னனி பதிவர்களின் பதிவுகள் சமீப காலமாக குறைந்து விட்டன, காரணம் என்னவென்று தெரியவில்லை. முக்கியமாக நம்ம வந்தியத்தேவனின் பதிவுகள் குறைந்தது எம்மை போன்று பின்னூட்ட கும்மியாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. 

சந்தேகம் 1  - இனி மேல் வந்தி இலங்கை பதிவரா அல்லது இங்கிலாந்து பதிவரா? அவரை எப்படி அழைப்பது?

சந்தேகம் 2 - இங்கிலாந்திலிருப்பதால் இனி வந்தி ஆங்கிலத்தில் பதிவெழுதுவதாக முடிவெடுத்துவிட்டாரோ?


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஓரு கட்டிடம் சரிந்து கிடக்கும் காட்சி





கற்றதும் பெற்றதும் - நான் வியந்த சுஜாதா

தமிழில் பலரை நான் வாசித்திருந்தாலும் சுஜாதா என்னும் எழுத்தாளரளவுக்கு யாரையும் ரசித்திருக்கவில்லை, காரணம் அந்த எழுத்துகள் என்னை என்னுள் ஏற்படுத்திய இரசாயண மாற்றங்கள். அந்த அற்புத எழுத்தாளர் எழுதிய கதைகளை வாசித்த என்னுள் இன்னும் கணேஷ், வசந்த், ஜீனோ, மெக்சிகோ சலவைக்காரி என்னும் கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கு இவ்வாறுதான் என நினைக்கிறேன். நம்மை விட்டு சுஜாதா பிரிந்து சனிக்கிழமையுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன

இவர் கதை, நாடகம், திரைப்படம், கட்டுரை என பல விடயங்களை தொட்டு சென்றிருந்தாலும், அதில் எதிலுமே குறைவைக்காமல் வாசகனை திருப்திபடுத்தியிருக்கிறார். தமிழில் விஞ்ஞான உலகை புனைத்து கதை எழுதும் திறமை இவர் அளவுக்கு யாரிடமும் இருக்கவில்லை என்றே கூறலாம். 

80களின் பிற்பகுதியில் இவர் எழுதிய ஒரு கட்டுரையில் “எதிர் காலத்தில் கையில் தூக்கி கொண்டு செல்ல கூடிய தொலைபேசி கண்டுபிடிக்கப்படும், அது  கண்டுபிடிக்கப்பட்ட பின் மனிதனின் ப்ரைவசி இல்லாமல் போய்விடும்” என கூறியிருந்தார். இவ்வாறு எதிர் காலத்தில் விஞ்ஞானவுலகில் நடக்க கூடிய விடயங்களை எதிர்வுகூறுவதில் இவருக்கு நிகர் இவரே.

இவரது கதைகளை வாசித்த பலருக்கு மெக்சிகன் சலவைக்காரி ஜோக் என்பது பிரபலமாகவிருக்கும், ஆனாலும் இதுவரை யாருக்குமே இந்த ஜோக் என்னவென்று தெரியாது, கணேஷ் வசந்த் என்னும் பாத்திரங்களை தனது கதைகளில் பயன்படுத்தி அவர்களை பிரபல்யமாக்கிய இவரது கதைகள் திரைப்படமாகியிருக்கின்றன. சங்கர், மணிரத்தினம் எனும் பிரபல இயக்குனர்களின் வலது கரமாக இருந்த சுஜாதாவின் இழப்பு தமிழ் சினிமாவுக்கு பெரிய அடியாக அமைந்தது என்றால் மிகையில்லை. தமிழ் திரைப்பட வரலாற்றில் மிகப் பெரிய சினிமாவாக அமையவிருக்கும் எந்திரன் படம் சுஜாதாவின் கதை என்று கூறப்படுகிறது, அப்படி அமைந்தால் மகிழ்ச்சியே.. 

ஆனாலும் தமிழ் சினிமா சுஜாதா என்னும் மாபெரும் எழுத்தாளனுக்கு செய்யக் கூடிய உதவி என்னவென்றால் அவரது கதைகளை படமாக்குகிறேன் என ஆனந்த தாண்டவம் போன்ற படங்களை வெளியிட்டு அந்த எழுத்துகளை கொலை செய்யாமலிருப்பதேயாகும். தயவு செய்து அந்த எழுத்துக்களை எழுத்துக்களாகவே வாழ விடுங்கள், படமாக்குகிறேன் என சுஜாதாவின் எழுத்துகளை அசிங்கப்படுத்தாதீர்கள். அவரது கதைகளை படமாக்கியதில் விக்ரம் எனக்கு பிடித்த படம், ஆனந்த தாண்டவம் திரைப்படம் பிடிக்காமல் போனதற்கு பிரிவோம் சந்திப்போம் நாவல் ஏற்படு்த்திய அனுபவத்தை திரைப்படம் தராமல் போனதாயிருக்கலாம்.

சுஜாதா என்னும் ரங்கராஜன் எழுதிய கணையாளியின் கடைசிப்பக்கங்கள், கற்றதும் பெற்றதும் போன்ற கட்டுரை தொகுப்புக்கள் வாசிக்க வாசிக்க இனிமையானவை, இளமையானவை, குறும்பானவை. கற்றதும் பெற்றதும் தொடர் நின்ற பின்னர் ஆனந்த விகடனை வாசிப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் இன்றும் நேரம் கிடைதால் பழைய ஆனந்த விகடன் சஞ்சிகை எடுத்து கற்றதும் பெற்றதும் வாசிப்பேன், எத்தனை முறை வாசித்தாலும் புதிய அனுபவத்தை தரக்கூடிய வல்லமையை அக்கட்டுரைகள் கொண்டிருக்கின்றன.

இவரும் பிரபல இந்திய விஞ்ஞானி அப்துல் கலாமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் சுஜாதாவாகும்.

சுஜாதா இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்திருந்தால் இன்னும் பல விடயங்களை எழுதியிருப்பார், நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.. 

சுஜாதா என்னும் எழுத்தாளரின் எழுத்துக்களில் நான் கற்றதும் பெற்றதும் ரொம்ப அதிகம்...



நூடுல்ஸ்

பொதுவாக நடிகராக அஜித் என்பவரை எனக்கு பிடிக்காது, ஆனால் அந்த மனுஷனின் உள்ளதை உள்ளபடி பேசும் குணம் பிடித்திருக்கிறது. ஆட்சியாளர்களுக்கு ஏற்ற வகையில் மாறி மாறி ஜால்ரா போடும் நடிகர்களுக்கு மத்தியில் அல்டிமேட் ஸ்டார் ஒரு வித்தியாசமான மனிதர், ஆனானப்பட்ட ரஜனியே ஜெயலலிதாவை பற்றி இவங்க ஆட்சி தொடர்ந்தால் இனி தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என கூறிவிட்டு கலைஞருக்கு அடுத்து ஜெயலலிதா முதல்வரானதும் ஜெயல்லிதாவின் துணிச்சலை கண்டு வியப்பதாக அவர் முன்னாலே மேடையில் பேசி அந்தர் பல்டி அடித்ததை பலர் பார்த்திருப்பர்.

இன்று அரசியலுக்கு வருவேன், இல்லை வரமாட்டேன், அடுத்த சனிக்கிழமை வருவேன், இப்போதைக்கு வருவதாக இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், என் கையில் எதுவுமேயில்லை என பேட்டி கொடுத்து பம்மாத்து காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகர்களுக்கிடையில் அஜித் வித்தியாசமான மனிதராக தெரிகிறார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் எது நடந்தாலும் அடுத்த்தாக கலைஞருக்கு பட்டமளிப்பு விழா அல்லது பாராட்டு விழா என அவ்வளவு பேரும் கலைஞரை பற்றி மேடையில் ஜால்ரா அடிப்பதை போலில்லாமல் மனதில் பட்டதை கூறியிருக்கிறார். இதனால் அஜித்துக்கு ஒரு ரசிகன் கூடியிருக்கிறான் (நான் என்னை சொன்னேன்)

ஓரு சின்ன சந்தேகம் – இவ்வளவு பேர் தன்னை புகழுவதை எப்படி இந்த மனுஷன் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறதோ?

இன்னொரு சின்ன சந்தேகம் – சினிமாவுக்கு கதை எழுதுவது, சினிமா நடிகர்களை சந்திப்பது, சினிமா விழாக்களில் கலந்து கொள்வது, பட்டம் வாங்கி சேர்த்து கொள்வது, சினிமா நடிகர்களின் சின்ன வீட்டு பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற வேலைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர் 6 கோடி பேரை ஆளுவதற்கு முதல்வருக்கு நேரமிருக்கிறதா?

------------------------------------------------------------------------------------------------------

ஞாயிற்றுக்கிழமை ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கட் போட்டி ஒன்றை கொஞ்சமாக பார்க்க வாய்ப்பு கிடைத்த்து, இந்திய தென்னாபிரிக்க ஒரு நாள் போட்டிகளில் பல முன்னணி வீரர்கள் இல்லாதது பரபரப்பை குறைக்கும் என நினைத்து தான் பார்த்தேன். ஆனால் எனக்கு செம திரில் போட்டி ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த்து, ஆனாலும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த அதிஷ்டம் தென்னாபிரிக்காவுக்கு இருக்கவில்லை எனப்படுகிறது,

1.       1.  இந்தியாவின் 50வது ஓவரில் ஆஷிஸ் நெஹ்ராவின் துடுப்பில் படாத பந்து விக்கட்டில் படுகிறது, ஆனால் அவர் ஆட்டமிழக்கவில்லை. காரணம் பெயில்ஸ் கீழே விழவில்லை மாறாக அந்த பந்து எல்லைக்காட்டை தாண்டி இந்திய அணிக்கு 4 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்கிறது.

2.       2.  49வது ஓவரில் ஆறு நான்கு ஓட்டங்களாக வாரி கொடுத்த நெஹ்ரா கடைசி பந்தை அகலபந்திற்கான எல்லையை நோக்கி வீசுகிறார், ஆனால் அது அகலப்பந்தாக அறிவிக்கபடவில்லை, கட்டாயம் இந்தியா துடுப்பெடுத்தாடியிருந்தால் அது அகலப்பந்தாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

3.       3. 50வது ஓவரில் லங்கவெல்ட் அடித்த பந்து எல்லைக்கோடு வரை செல்லும் போது சச்சின் கீழே விழுந்து அதை தடுக்கிறார், ஆனால் நடுவருக்கு அது 4 ஓட்டமா இல்லையா என சந்தேகம், ஆனால் இந்தியாவின் அதிர்ஷமாக அதை கிட்டிய கோணத்தில் எந்த கேமராவும் படமெடுக்கவில்லை, சந்தேகத்தின் பயனை இந்தியாவிற்கு நடுவர் வழங்கினார்.

இதில் ஏதாவது ஒரு நிகழ்வு கொஞ்சம் மாறுபட்டிருந்தால் இந்தியா ஒரு ஓட்டத்தால் வென்ற இப்போட்டியின் முடிவு மாறியுமிருக்கலாம்.

மீண்டும் ஒரு சந்தேகம் – கடைசி நேரத்தில் மைதானத்தில் பந்து தடுக்க ஷேவாக்கை காணவில்லை, ஒரு வேளை பந்தை மைதானத்திற்கு வெளியே காலால் உதைத்து அனுப்பிவிடுவார் என்னும் பயத்தில் அவரை தோனி ரெஸ்ட் ரூமிலே இருக்க சொல்லி விட்டாரோ?

------------------------------------------------------------------------------------------------------

எனது மொபிடெல் (மொபைல் ப்ரோட்பேண்ட் இணைய) இணைப்பை விட்டு வேறு இணைப்பிற்கு செல்ல்லாம் என நினைக்கிறேன், காரணம் மொபிடெல்லில் அறிமுகப்படுத்தப்படும் சலுகைகள் அனைத்தும் அரசாங்க ஊழியர்களுக்கே வழங்கப்படுகிறது. எங்களை போன்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களை அவர்கள் கணக்கில் எடுப்பதேயில்லை, இவ்வளவுக்கும் நான் மொபிடெல்லின் ஒரு பழைய வாடிக்கையாளர், ஆனால் என்னைவிட புதிதாக மொபிடெல்லில் இணையும் அரசாங்க ஊழியர்களுக்கு அதிக பயன்கள் வழங்கப்படுகிறது, இது எங்களை போன்ற பழைய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் அநீதியாகவே பார்க்கிறேன். ஆனால் புதிதாக எந்த கனெகஷக்கு போவது என தீர்மானிக்க இயலாமலிருக்கிறேன்

------------------------------------------------------------------------------------------------------

இவ்வாரம் எங்களை விட்டு பிரிந்த இலங்கை தமிழ் கலையுலகின் பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பாவிற்கு எனது அஞ்சலிகள். கடைசியாக “இருக்கிறம்ஏற்பாடு செய்த அச்சுபதிவு சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் கொஞ்சம் பேச கிடைத்த்து. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பதிவர்கள் சார்பில் வேண்டி கொள்கிறேன்.
 ------------------------------------------------------------------------------------------------------

எதிர்வரும் 27ம் திகதி எழுத்தாளர் சுஜாதா எம்மை விட்டு பிரிந்து இரண்டு வருடமாகிறது. அவர் தமிழ் எழுத்துத்துறையில் ஏற்படுத்திவிட்டு சென்ற இடைவெளி இன்னும் யாராலும் நிரப்பப்படாமலே இருக்கிறது. யாராலும் அந்த இடத்தை முழுமையாக நிரப்ப முடியும் என நினைக்கவும் முடியாது, காரணம் அவரை போல் சகல விடயங்களையும் பற்றி தெளிவாகவும் எளிமையாகவும் எழுதுபவர்கள் ரொம்பவே குறைவு. சுஜாதா பற்றி இந்த வாரம் ஒரு பதிவெழுத நினைத்திருக்கிறேன், பார்ப்போம் நேரம் கிடைத்தால் கட்டாயம் எழுத வேண்டும்.
 ------------------------------------------------------------------------------------------------------


விண்ணைத்தாண்டி வருவாயா“ ரிலீசாக போகிறதாம் எப்படியும் முதல் வாரத்திலே பார்த்துவிட வேண்டும் இந்த படத்தை நான் விரும்பி பார்க்க விருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது, அது ஆஸ்கார் விருது வென்ற பின்னர் ஏ.ஆர். ரகுமானின் இசையில் தமிழில் வெளிவரும் முதல் படம் என்பதாலாகும்.






பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 2

சென்ற வாரம் நான் எழுதிய (கிறுக்கிய) காதலர்களின் காதலர் தின கொண்டாட்டங்கள் பற்றிய “டணால்” அறிக்கையின் தொடர்ச்சி......


பதிவர் லோஷன்
இந்த வருட காதலர் தினத்தை பல காதலிகளோடு கொண்டாடிய பிரபல மூத்த பதிவர் லோஷன் அவர்கள் இரவு வீடு செல்ல நேரமாகியது, நேரம் சென்று வீட்டுக்கு வந்த லோஷனை அண்ணி “ஏன் லேட்?” என கேட்க , அதற்கு வெற்றி எப்.எம் இரண்டாவது வருட புர்த்தி கொண்டாட்டங்களில் நேரம் போய்விட்டதாக பொய் சொல்லி சமாளித்தாகவும் பட்சி கூறுகிறது.


கடந்த முறை 3 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடிய லோஷன் இம்முறை 5 காதலிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் பட்சி சொல்லியது


பதிவர் புல்லட்
காதலர் தினத்தில் காதலி கிடைக்காத சோகத்தில் மனுஷன் கோவா படத்தை பார்த்து விட்டு நண்பரொருவருடன் முழு நாளும் கோல்பேசில் நேரத்தை போக்கியதாக தகவல். கலகல பார்ட்டியான மனுஷன் காதலி கிடைக்காத சோகத்தில் இப்போவெல்லாம் சீரியஸ் பதிவிடுவது அனைவரும் அறிந்ததே. 


மனுஷன் கோவா படம் பார்த்ததும், முன் வீட்டு நாணிப்பாட்டி புல்லட்டை காதலர்தினத்தன்று தேடியதும், நண்பரோடு பொழுதை போக்கியதும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாத விடயங்கள் என பட்சி கூறுகிறது.


பதிவர் வரோ
நட்சத்திர கலை விழா பதிவை சிறப்பாக எழுதி பதிவிட்டு தூங்கிய மனுஷன் காதலர் தினத்தன்று முழித்து பார்க்கும் போது கட்டிலை சுற்றி பல இளம் பெண்கள் இவருக்காக காதலர் தின அட்டைகளை நீட்டி கொண்டிருந்ததை கண்ட வரோ சந்தோஷம் தாளாமல் ஒரு பெண்ணை தெரிவு செய்து இவளை நாம் காதலியாக்கி கொள்ளுவோம் என நினைத்து அவளது காதலர் தின அட்டையை வாங்க கை நீட்டினார்.படார் என சத்தம் 


என்னவென்று பார்த்தால் இவ்வளவு நேரமும் கனவு கண்ட மனுஷன் காதலியை நோக்கி கை நீட்ட எத்தனித்ததில் கட்டிலில் தூங்கியவர் கீழே விழுந்து கால் சுளுக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பதிவர் பங்குச்சந்தை அச்சு


பங்குசந்தை பற்றி எழுதும் பதிவர் காதலி தேடி இலங்கைக்கும் மலேசியாவுக்கும் பறந்து பறந்து ஒருவாறு காதலி ஒருத்தியை தேடி கண்டுபிடித்து இருவரும் தாறுமாறாக காதலிக்க தொடங்கினர். பெரிய வியாபாரியான அப்பெண்ணுக்கும் நம்ம பதிவருக்கும் இடையில் ஏதொ ஒரு நிறுவன பங்குகளை வாங்குவதில் ஏற்பட்ட முறுகலில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கிடையிலான பேச்சுக்கள் ரத்து.  காதலியுடன் மௌன மொழியில் கதைத்து காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம பதிவர் இப்போதெல்லாம் வாயில் முணு முணுக்கும் பாட்டு வரி


“நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா கவலைப்படாதே கண்ணா கவலைப்படாதே”


இப்பாடலை இவர் கன்கொனுக்கு ஆதரவாக பாடுவதாக கன்கொன் கோபி நினைத்திருக்கிறார். உண்மையில் இது அவரே அவருக்காக பாடும் பாடலாகும்.


பதிவர் ஆதிரை
படம் காட்டும் பதிவரான (பதிவுலகில் சொல்கிறேன்) இவர் காதலர் தின கொண்டாட்டத்தை வேலைத்தளத்தில் காதலிகளுடன் விமர்சையாக கொண்டாடி விட்டு கிடைத்த பரிசுப் பொருட்களை யாருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்துள்ளதாகவும் அந்த பரிசு பொருட்களை கொண்டு செல்ல “கன்டெயினர் ” ஒன்றை தேடுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


பதிவர் கௌபோய் மது
மஜா பதிவர் என்றழைக்கப்படும் பதிவர் மது காதலர் தினத்தன்று மிஸ்ஸிங் இவரை பற்றி தகவல் சேகரிக்க சென்ற எமது குழுவும் மிஸ்ஸிங். 


யாராவது இவங்களை கண்டால் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க




இப்பதிவு சிரிப்பதற்கு மாத்திரமே என்பதை கூறிக்கொண்டு, இந்த மொக்கை பதிவின் இரண்டாம் பாகத்தை எழுத சொல்லி டிவிட்டிய அனுதினனுக்கு நன்றி சொல்கிறேன். இவரை பற்றி அதிகம் தெரியாததால் இவரது கொண்டாட்டம் பற்றி எழுத முடியவில்லை, அனுதினனை பற்றி நன்றாக தெரிந்த யாராவது பின்னூட்டத்தில் இவரது காதலர் தின கொண்டாட்டத்தை பற்றி எழுதவும்


நூடுல்ஸ்


கடந்த வாரம் எனக்கு  வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக எங்களுக்கு கிட்டிய இடத்தில் இருக்கும் ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றேன், அங்கு எனக்கு ஏற்பட்டிருப்பது உணவு ஒவ்வாமையினால் (Food Poison) ஏற்பட்ட வருத்தம் என மருந்து கொடுத்தனர், ஆனாலும் வலி குறையாமையால் அடுத்த நாளும் மருந்து எடுக்க வேறு ஒரு தனியார் வைத்தியசாலைக்கு சென்றேன், அங்கு என்னை சோதித்து எனக்கு ஏற்பட்டிருப்பது தசைப்பிடிப்பு எனக்கூறி மருந்து தந்தனர். அந்த மருந்தால் தான் எனது வருத்தம் குணமாகியது.

எனது கேள்வி இப்படி எல்லாம் மருந்து கொடுக்கும் இந்த வைத்தியர்களையும், தனியார் வைத்தியசாலைகளையும் கவனிக்க யாருமில்லையா?காரணம் நான் நோயால் பட்ட வருத்தத்தைவிட பிழையான மருந்தை உட்கொண்டதால் இரண்டு நாட்கள் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன். இதே நிலை சிறுவர்களுக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்?????
--------------------------------------------------------------------
கூகுல் புஸ்ஸோ இல்லை பஸ்ஸோ என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இதை அவர்கள் பேஸ்புக்குக்கும் டிவிட்டரும் இணைந்த ஒரு சேவையாக தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். டிவிட்டர்க்கு போட்டியாக வந்தாலும் பேஸ்புக்கை மாற்றிட இப்போதைக்கு இயலாது என நான் நினைக்கிறேன். காரணம் பேஸ்புக்கின் விஸ்தீரணம் அதிகம்.

எனது பாடசாலை நெருங்கிய நண்பன் ஒருவன்  பள்ளி காலத்திற்கு அப்புறம் தொடர்பற்றிருந்தேன், சென்ற மாதம் பேஸ்புக்கில் அவன் என்னை பார்த்து என்னுடன் தொடர்பு கொண்டு இப்போது பிரான்சில் இருப்பதாக சொன்னான், இதே போல் பலரது பல நண்பர்களை பேஸ்புக் இணைத்துள்ளது. மேலும் எனது நண்பர்களும் உறவினர்களும் பல ஊர்களிலும், பல நாடுகளிலும் இருந்தாலும் அவர்கள் என்னைவிட்டு தூர இருப்பதாக ஒரு நாளும் எண்ணியதில்லை. இதற்கெல்லாம் காரணம் இந்த மூஞ்சி புத்தகம். இப்போதெல்லாம் நாங்கள் பேஸ்புக்கில் இடப்படும் ஸ்டேஸ் மெசேஜ், புகைப்படங்கள், வீடியோக்கள் அதே கணம் உலகிலுள்ள பலரையும் சென்றடைந்து எங்களது உணர்வுகளை பகிர செய்வதன் எங்களுடன் மிகவும் நெருங்கியமைந்து காணப்படுகிறது இந்த மூஞ்சிப்புத்தம், (இதற்கு போட்டியாகவுள்ள My Space, HI5, Friend Star என எதுவும் இலங்கையில் மூஞ்சிப்புத்தமளவுக்கு பிரபல்யமாகவில்லை).

இந்தளவு எங்களோடு உணர்வுபுர்வமாகஇணைந்துள்ள பேஸ்புக்கை கூகுலால் வெல்ல முடியாதென்றே நினைக்கிறேன். 
--------------------------------------------------------------------
சென்ற வாரம் எமது நிறுவனத்தை சகா சேர்ந்த ஒருவர் தனது காரில் இரவு நேரத்தில் தூர பிரயாணிக்கும் போது ஒரு வணக்கஸ்தலத்திற்கு அருகாமையில் காரை விட்டு இறங்கி கடவுளை வணங்கிவிட்டு உண்டியலில் ஒரு சில்லறை நாணயத்தை போட்டு காரில் ஏறும் போது ஒருவன் கத்தியை காட்டி பயமுறுத்தி காரை பறித்து கொண்டு சென்றுவிட்டான்.

காரையும் திருடனையும் அன்றிரவே பிடித்தாயிற்று. ஆனாலும் இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும், இரவு நேரங்களில் வாகனங்களை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் நிறுத்துவதை தவிர்த்தல் நலம்.
--------------------------------------------------------------------

அசல், தமிழ்படம் ஆகிய இரு படங்களை இந்த வாரம் பார்த்தேன், தமிழ் படம் மிகவும் சிறப்பாக இருந்த்து. ரஜனி, கமல், விஜய், விக்ரம், அஜித், சூர்யா படங்கள் முதல் அந்த கால படங்கள் வரை கலாய்த்திருக்கின்றனர். நண்பர்களோடு இணைந்து சிரித்து சிரித்து பார்க்க இந்த படம் மிக சிறந்த்து, இதை பார்த்த பின்னரும் பஞ்ச் டயலாக் பேசுவது, ஒரே பாட்டில் பணக்காரனாவது, சென்னை ரயில் நிலையத்தை அடையாளமாக காட்டுவது, விரல் வித்தை செய்வது, அறிமுக காட்சியில் சண்டை, குடும்ப பாட்டில் ஒன்று சேர்வது, பட்டங்கள் வைத்து கொள்ளுதல், வயதான நடிகர்களை நண்பர்களாக நடிக்க வைப்பது என்பவற்றை யாராவதும் செய்தால் அதை பார்த்து நாம் சிரிக்க வேண்டியதுதான்.

அசல் படம் பில்லா பாதிப்பில் அஜித் நடித்திருக்கும் இன்னொரு படம். விஜய்க்கு நடனம் எவ்வாறோ, அஜித்துக்கு நடை அவ்வாறே. தல படம் முழுதும் ஸ்லோமோஷனில் நடந்திருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக போகும் படம் பம்பாய் வில்லனின் சாவிற்கு பிறகு ஸ்லோமோஷனில் போகிறது. இடைவேளையின் பின் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் நாம் எதிர்பார்த்த படியே நடப்பது படத்தின் மைனஸ்.
--------------------------------------------------------------------
இன்று முடிந்த இந்திய தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து, கடைசி ஓவருக்கு முந்திய ஓவரில் இந்திய வெற்றி பெற்றிருக்கிறது, ஆனாலும் தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஹம்லா கடைசி வரை போராடியது பாராட்ட தக்கது. இதன் மூலம் இந்தியா தரப்படுத்தலில் முதலிடத்தை தக்கவைத்து கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் இந்தியா இம்முதலிடத்தில் இருப்பது எனக்கு பிழை என்றே படுகிறது. இந்திய முதலிடத்தை பெற்ற போட்டியில் இரண்டு இனிங்சிலும் போமிலிருந்த டில்ஷானுக்கு கொடுக்கப்பட்ட பிழையான ஆட்டமிழப்புக்கள் காரணமாகவே இந்தியா அப்போட்டியில் வென்றது, அதே போட்டியில் சரியான ஆட்டமிழப்பு ஒன்று வழங்கப்படாத ஷேவாக் ஆடிய புயல் ஆட்டமும் இந்தியா வெல்ல ஒரு காரணமாகும்.
--------------------------------------------------------------------
கடைசியில் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடிய நம்ம பவனுக்காக அவரது காதலி (என எந்நேரமும் பிதற்றும்) எமா வெட்சனின் படம்




பதிவர்களின் காதலர் தினம் - பகுதி 1

காதலர் தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்ட தொடங்கியிருக்கின்றன. இலங்கையிலுள்ள நம் பதிவர்கள் இந்நிகழ்வுக்கு எப்படி தயாராகியிருக்கின்றனர் என்பது பற்றிய டணால் அறிக்கை (பகீர் அறிக்கை என பத்திரிக்கையில் வருவதால் இது டணால் அறிக்கை). தன் உயிர் பற்றி கூட சிந்திக்காது வேவு பார்த்து இக்கட்டுரையை எழுதுவது யோ 007....

பதிவர் சுபாங்கன்
”போன வருஷம் நாம ட்ரை பண்ணுன பிகர், இந்த முறை யார லவ்விட்டு இருக்கோ தெரியாது, எதுக்கும் நம்ம ஸ்பெஷல் ஹெயார் கட்டிங் செய்து யாரையாவது கவர் பண்ண பார்க்க வேண்டும்,” என பச்சை நிறத்தில் உடை தயார் செய்கிறார் கொழும்பு பல்கலைகழக காதல் மன்னன் ஐந்தறைப் பெட்டி சுபாங்கன்

 இவர் வருடம் முழுவதும் ட்ரை பண்ணிய கெம்பஸ் பிகர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டுவதால் இம்முறை வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளார். இடம் நிச்சயமாக தெரியாததால் எங்கு சென்று இவருக்கு காதலர் தின வாழ்த்தட்டை வழங்குவது என இவரது காதலிகள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

பதிவர் (இட்லி போய்) கோபி
”நம்ம லெவலுக்கு ஒரு ஐஸ்வர்யா ராய் வரும்” என இருந்த கோபிக்கு அபிஷேக் அவரை திருமணம் செய்த செய்தி சில நாட்களிற்கு முன்னரே தெரிய வந்ததால் அபிஷேக் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வடை போனதால் கோவம் மற்றும் கவலையில் இருக்கும் கோபி ஏதாவது பெண்களின் ஹாஸ்டலை முற்றுகையிடலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களிடமிருந்து செய்தி வந்திருக்கிறது.

எதற்கும் கவனமாயிருங்கள் ஹாஸ்டல் பெண்களே....

பதிவர் பவன்
தனது படங்களை ரசித்து தினமும் காதல் கடிதம் எழுதும் பெண் ரசிகைகளிலிருந்து (ரசிகைகள் என்றாலே பெண்கள்தானே அப்புறம் என்ன பெண் ரசிகைகள் என யாரும் கேள்வி கேட்க கூடாது? அப்புறம் உங்களை பற்றியும் அவர் படம் போட்டுடுவார்) யாரையாவது தெரிவு செய்யும் யோசனையிலிருக்கும் இவர், திருகோணஸ்வரத்திற்கு வரும் யாரையாவது தெரிவு செய்யலாமா எனவும் யோசித்து வருகிறார்.

எதற்கும் நாம் கவனமாயிருக்க வேண்டும், மனுஷம் 15ம் திகதி எரிந்தும் எரியாமலும் வந்தாலும் வந்திடுவார்.

பதிவர் வந்தியத்தேவன்
இப்போது இங்கிலாந்திலிருக்கும் இவர் வெள்ளைக்கார பெண்களை கணக்கு செய்ய போய் சில பல உள் காயங்களுடன் வலம் வருவதாக தகவல். எனினும் எதற்கும் மனம் தளரா வந்தி அவர்கள் இங்கிலாந்தில் (தான் தனியாக மட்டும்) இருக்கையில் எடுக்கப்பட்ட படங்களை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு உலகம் முழுவதும் காதலி தேடுகிறார்.

இப்போதைக்கு இவர் இங்கிலாந்து இளவரசி ஒருத்தருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அதனால் பக்கிங்காம் அரண்மனையில் இவ்வருட காதலர் தினத்தை கொண்டாடவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இவரது பழைய காதல் கதைகளை கேள்விப் பட்டால் மகாராணி இவருக்கு என்ன தண்டனை வழங்குவார் என இவரது பதிவுலக சகாக்கள் கவலையுடன் கலந்துரையாடி கொண்டிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் பதிவர் வந்தியில் 
முதுகில் வரையப்பட்டுள்ள இதயம்

மற்றைய பதிவர்களின் தகவல்கள் நாளை தொடரும்