Showing posts with label கிரிக்கட். Show all posts
Showing posts with label கிரிக்கட். Show all posts

நான் ரசித்த கிரிக்கட்டூன்கள்

பதிவு எழுத முடியாமல் எனது இணைய இணைப்பில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதனால் ஒரு பட பதிவு. நான் ரசித்து சிரித்த சில கிரிக்கட் கார்ட்டூன்கள்



















ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 2)

இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் கொண்ட தொடரை விளையாட வேண்டிய இலங்கை அணி, அங்கு சென்று விளையாட வில்லை. காரணம் முன்னணி வீரர்களான மகேல, சங்கக்கார, முரளி போன்றோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட வேண்டும் என கூறி அத்தொடரை இரத்து செய்துவிட்டனர்.

அதிக காலம் இங்கிலாந்திற்காக விளையாடி சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஆனாலும் ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். 1000 டெஸ்ட் விக்கட்டுகளை பெற்று சாதனை புரிவார் என எதிர்பார்க்கப்பட்ட முரளி. இந்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போகிறாராம், ஆனால் தொடர்ந்து ஐ.பி.எல்லில் விளையாடுவாராம். இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்க வேண்டிய லசித் மாலிங்க கடந்த இரண்டு வருடங்கள் முழுமையாக விளையாடியது ஐ.பி.எல் தொடர்களில் மாத்திரம் தான். தனது நாட்டுக்காக விளையாடாமல் பிரெட் லீ ஐ.பி.எல. தொடரில் விளையாட விரும்புகிறார்


இவற்றை பார்க்கும் போது சர்வதேச வீரர்கள் தங்களது நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும், ஐ.பி.எல்லில் விளையாடுவதை விரும்புவதாக தெரிகிறது, ஆனால் இதை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. காரணம்

1. அதிக பிரபலமல்லாத திறமையுடைய வீரர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
உதாரணமாக சங்கக்கார, மகேல, முரளி, டில்சான் போன்ற 4 அல்லது 5 பேர் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கட் அணி கொடுக்கப்போகும் விலை. அந்த அணியின் வீரரும் உலகிலுள்ள மிக சிறந்த விக்கட் காப்பாளருமான பிரசன்ன ஜயவர்தனவுக்கு இந்த காலப்பகுதியில் விளையாட போட்டிகள் கிடைக்காமல் போவதால் அவரது போர்ம் மற்றும் மனநிலை மாற்றம் காரணமாக அவரது திறமை மங்கிப் போகலாம்.


2. FTP யில் மாற்றங்களை ஏற்படுத்தால் பல நாடுகளுக்கு சர்வதேச போட்டிகள் இல்லாமல் போதல்.
சர்வதேச கிரிக்கட் அட்டவணையை மாற்றம் செய்வதால் அந்த காலப்பகுதியில் பல நாடுகளுக்கு போட்டிகள் அற்றுப்போதல். இதில் முக்கியமாக பாதிக்கப்பட போவது அதிகம் பிரபலமல்லாத அல்லது தனது ஒரு வீரரேனும் ஐ.பி. எல் தொடரில் விளையாடா சிம்பாபே, பங்களாதேஷ் போன்ற அணிகள்.

3. பந்து வீச்சாளர்கள் என்பவர்கள் ஓட்டங்களை கட்டுபடுத்துபவர்கள் மாத்திரமே என்னும் நிலை ஏற்படலாம். 
இன்னும் என்னை போன்ற பலருக்கு டெஸ்ட் போட்டிகள் பிடிக்க காரணம், அதிலுள்ள ஜீவன். திறமையுள்ளவாகள் மாத்திரமே அங்கு தொடர்ந்து சாதிக்கலாம். சச்சின் 20 வருடங்கள் டெஸ்ட் போட்டிகளில் சாதிப்பதற்கு காரணம் அவரது திறமை, ஆனால் திடீரெ னஒரு யுசுப் பதான் சச்சினை விட சிறந்த ஆட்டக்காரராக 20-20 போட்டிகளில் உருவகப்படுத்தப்படலாம், ஆனால் டெஸ்ட் போட்டி என வரும் போது யுசுப் பதானால் அவரது அதிரடியை மாத்திரம் கொண்டு சச்சின் போல் எதுவும் சாதிக்க இயலாது. காரணம் டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சாளர்களுக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. 

மார்க் டெயிலர் தலைவராக இருந்த போது துடுப்பாட்ட வீரரை சுற்றி 6 பீல்டர்களை நிக்க வைத்து ஷேர்ன் வோனை பந்து வீச அழைத்து விக்கட்டுகளை கைப்பற்றியது போன்று 20-20 போட்டிகளில் ஷேன் வோர்னால் விக்கட்டுகளை பெற இயலாது காரணம் அவருக்கு பந்து தடுப்பாளர்களை விருப்பப்படி வைக்க முடியாது. அந்தளவுக்கு பந்து வீச்சாளரை கட்டுப்படுத்தி கிரிக்கட்டை துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமான விளையாட்டாக 20-20 போட்டிகள் மாற்றியது. 

மேலும் எந்த பந்து வீச்சாளர்களையும் எதிர்த்து அநாயாசமாக அடித்து ஆடலாம் காரணம் பீல்டிங்கில் உள்ள கட்டுபாடுகள். முரளியின் விக்கட் எடுக்கும் போர்ம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது ஐ.பி.எல்லில் அவரை எதிர்த்து துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை பெற்றதையாகும்.

4. அணி உரிமையாளர்களான பணக்காரர்கள் கிரிக்கட் வீரர்களை தங்களுக்கு வேண்டிய விதத்தில் விளையாட சொல்வது.

ஷாருக்கான் சொல்படி பொன்டிங், கிறிஸ் கெயில், இஷாந் சர்மாவும், விஜய் மல்லையாவுக்கு தேவையான படி காலிஸ், பீட்டர்சன், ட்ராவிட், கும்ளே விளையாடுவதும், சங்கக்கார, மகேல, யுவராஜ் போன்றோருக்கு பிரீத்தி ஷிந்தா போன்றோர் கிரிக்கட் பயிற்றுவிப்பதும் கிரிக்கட்டுக்கு நல்ல எதிர்காலமாக எனக்கு தெரியவில்லை.

இன்னும் சில விபரங்கள் அடுத்த பகுதியில்



ஐ.பி.எல் – மறைக்கப்பட்ட மறுபக்கம் (பாகம் 1)


2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் நோக்கோடு மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற இந்திய கிரிக்கட் அணி, அப்போதைய ரேட்டிங்கில் கடைசியிடத்திலிருந்த பங்களாதேஷ் அணியிடம் தோல்வி கண்டு போட்டி தொடரிலிருந்து விலகி நாடு வந்த்தும் ரசிகர்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பில் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “ஏன் இவர்களை விட நன்றாக விளையாடகூடிய வீரர்கள் நாட்டில் இல்லையா”. மேலும் முன்னணி வீரர்கள் விளம்பரம் நடிக்கும் நேரமளவுக்கு கூட கிரிக்கட் பயிற்சியிலீடுபடவில்லை என்னும் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.



உலக கிண்ணத்தை 1983இல் இந்தியாவுக்கு கொண்டு வந்த தலைவரான கபில்தேவ், சிறந்த பல இளம் வீர்ர்களை சர்வதேச அளவுக்கு கொண்டு வருவதாக சூளுரைத்து, அந்த காலத்தில் இந்தியாவிலுள்ள பல இளம் கிரிக்கட் வீரர்களையும், சர்வதேச வீரர்களையும் கொண்டு உருவாக்கியதுதான் ஐ.சி.எல். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் கடையில் உடை வாங்க சென்றாலும் அந்த நிகழ்வை விற்று காசு சம்பாதிக்கும் இந்திய கிரிக்கட் சபைக்கு கபில் தேவின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஐ.சி.எல்லினால் இந்திய கிரிக்கட் சபைக்கு “பெரியளவில் எந்த வருமானமும் இல்லாத்தாகும். இதனால் இந்திய கிரிக்கட் சபை அந்த லீக்கில் விளையாடும் வீரர்களை தடைசெய்த்து மட்டுமல்லாது, தனது பணபலத்தை வைத்து ஐ.சி.சியை பணிய வைத்து ஐ.சி.எல்லில் விளையாடிய சர்வதேச வீரர்களை சர்வதே போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைத்த்து. ஆனாலும் இம்முறையை கைகொண்டு இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை கண்டறிந்த இந்திய கிரிக்கட் சபை தொடங்கியதுதான் ஐ.பி.எல்.



ஐ.பி.எல். தொடங்கும் போது அதற்கு சொல்லப்பட்ட காரணம் இளம் இந்திய வீரர்களது திறமையை வளர்ப்பதற்கு என்பதாகும். இதற்கு தலைவராக திறமையான வியாபாரியான லலித்மோடியை களத்தில் இறக்கியது, இதற்கு முக்கிய காரணம் லலித்மோடி கிரிக்கட் வாரியத்தில் சேர்ந்ததன் பின்னர் இந்திய கிரிக்கட் வாரியத்தின் வருவாய் 7 மடங்காக அதிகரித்த்து. தேர்ந்த வியாபாரியான லலித் மோடி இந்த கிரிக்கட் வியாபாரத்தை நன்றாக திட்டமிட்டு இலாபகரமாக மாற்றுவார் என்பதை அறிந்துதான் தலைமை பதவியை அவருக்கு வழங்கினார்கள், அவர்களை லலித் மோடியும் ஏமாற்றவில்லை

பணம் கொழிக்கும் 8 முக்கிய நகரங்களை அடிப்படையாக வைத்து 8 அணிகளை உருவாக்கி அதை ஏலம் விட்டு பெரும் வருமானத்தை பெற்றார். கிட்டத்தட்ட ஒரு அணி 67-112 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டது. அதிக பட்சமாக மும்பாய் அணி 111.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தாலும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணி 67 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு எமர்ஜிங் மீடியா நிறுவனத்தாலும் வாங்கப்பட்டது. இவ் ஏலத்தினால் இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலே வருமானம் கிடைத்துள்ளது. மேலதிகமாக 10 வருடங்களுக்கு உத்தியோக புர்வ ஊடகமாக தெரிவு செய்யப்பட்ட சோனி நிறுவனம் 1.026 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. தலைப்பில் (DLF IPL) தனது பெயரை போட்டு கொள்ள DLF  நிறுவனம் ஐந்து வருடத்திற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. நடுவர்களின் அனுசரனையாளர்களான கிங்பிஷர் நிறுவனம் 5 வருடத்திற்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களையும்மேலும் ஹீரொ ஹொன்டா நிறுவனம் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெப்சிகோலா நிறுவனம் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கியுள்ளது.

இத்தனை மில்லியன் டொலர்களை இலாபமாக குவித்த இந்திய பிரிமியர் லீக்கும் இந்திய கிரிக்கட் சபையும் உலக கிரிக்கட்டுக்கு வழங்கியது என்ன வென அடுத்த பாகத்தில் எழுதுகிறேன்





கிரிக்கட்டோ கிரிக்கட்..... (தொடர் பதிவு)

எரிந்தும் எரியாமலும் எழுதும் பதிவெழுதும் பவனின் பதிவில் என்னையும்  இப்படி பதிவெழுத யாராவது அழையுங்கள் என பின்னூட்டினேன், மாலையில் வந்து பார்த்தால் நமக்கொரு அடிமை சிக்கிட்டான்என ஐந்தறை (மணிக்கே) பெட்டியில் பதிவழுதும் சுபாங்கனும்,  இட்டிலி போய் அல்லது கன் கொன் என பதிவெழுதும் கோபியும் என்னை இத்தொடர்பதிவை தொடர அழைத்திருக்கிறார்கள். கிரிக்கட் எப்போதுமே எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் விருப்பத்துடன் இத்தொடர் பதிவை எழுதுகிறேன்.


இத்தொடர் பதிவின் விதிகள்
§  உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.

§  தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

§  குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.


1.பிடித்த கிறிக்கற் வீரர்? அரவிந்த டீ சில்வா
   இவருக்கு மற்றைய முன்னணி வீரர்களை போல் போட்டிகள் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் இன்றைக்கு பேட்டிங் சாதனைகள் அனைத்தும் இவர் வசமாகியிருக்கும். நான் கண்ட மிக சிறந்த மெட்ச் வின்னர், இதற்கு சிறந்த உதாரணம் 1996 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் 3 விக்கட்டுகள், 2 கேட்சுகள்அவுட் ஆக எந்த சந்தர்ப்பத்தையும் எதிரணிக்கு வழங்காமல் பெற்ற சதம் என்பவற்றின் மூலம் இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்ததை கூறலாம்.

2.பிடிக்காத கிறிக்கற் வீரர்? ஹர்பஜன் சிங்
  எனது பதிவுகளை வாசித்தவர்களுக்கு, ஹர்பஜன் சிங்கை நான் எந்த அளவுக்கு வெறுக்கிறேன் என தெரியும்.

3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர்? வெள்ளை மின்னல் அலன் டொனால்ட், ஆகிப் ஜாவேட் மற்றும் இயன் பிஷப்.
சிறுவயதில் கிரிக்கட் விளையாடையில் இவர்களது பாணியில் பந்து வீச எவ்வளேவோ முயன்றிருக்கிறேன்.  ஆகிப் ஜாவேட் மாதிரி ஹெயார் ஸ்டைல் எல்லாம் செய்து பந்த வீசியிருக்கிறேன்.

4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்? ஆஷிஸ் நேரா, ஸ்ரீ சாந்த்
மைதானத்தில் மற்றைய வீரர்களுக்கு மரியாதை கொடுத்து விளையாடுவதில் இவர்களை அடித்து கொள்ள ஆளேயில்லை, அவ்வளவுக்கு கனவான் வீரர்கள்..

5.பிடித்த சுழற்பந்துவீச்சாளர்? முரளி மற்றும் வோர்ன்
கலக்கல் மன்னர்கள், என்ன செய்தாவது விக்கட்டுகளை வீழ்த்தி விடுவார்கள். பெயிலியர் ஆன சந்தர்ப்பங்கள் மிக குறைவு.

6.பிடிக்காத சுழல்ப்பந்துவீச்சார்? பிடிக்காத வீரரும் ஒரு சுழல் பந்து வீச்சாளர்தான்அவரில்லாமல் பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர் ஆஷ்லி ஜைல்ஸ்.
காலுக்கு பின்னால் பந்து வீசி பொறுமையை சோதிப்பதில் மன்னன்.

7.பிடித்த வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அரவிந்த டீ சில்வா மற்றும் ரிக்கி பொண்டிங்.
எல்லா விதமான ஷொட்களையும் மிக அழகாக அடிக்க கூடியவர்கள், அதிலும் முக்கியமாக எனது விருப்ப ஷொட்களான புல் மற்றும் ஹுக் ஷொட் அடிப்பதில் விண்ணர்கள் (வின்னர்களும் தான்)

8.பிடிக்காத வலதுகைத்துடுப்பாட்டவீரர்? அப்துல் ரசாக்
அவர் துடுப்பெடுத்தாடும் பாணி அசிங்கமாக இருப்பதால், முரளியை விட அசிங்கம் என கூறவில்லை, ஆனால் முரளியை துடுப்பாட்ட வீரராக யாரும் நினைப்பதில்லை என்பதால் எனது தெரிவு ரசாக்.

9.பிடித்த இடதுகைத்துடுப்பாட்டவீரர்சனத் ஜயசூரிய மற்றும் பிரையன் லாரா
இவங்க அடிக்க தொடங்கினால் சும்மா அதிரும். நீண்ட காலமாக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்கள், மிக சிறந்த மெட்ச் வின்னர்கள்

10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்? கௌதம் காம்பீர்
இவர் எல்லா பந்துக்கும் நடந்து வந்து அடிக்கும் டெக்னிக் எனக்கு பிடிக்காமையினாலாகும்.

11.பிடித்த களத்தடுப்பாளர்? ஜொன்டி ரோட்ஸ் மற்றும் ரிக்கி பொண்டிங்
மின்னல் வேகத்தில் களத்தடுப்பில் ஈடுபடுவதால் இவர்களை பிடிக்கும், இலங்கை வீரர்களில் ரொஷான் மகாநாமவையும் ரொம்ப பிடிக்கும்.

12.பிடிக்காத களத்தடுப்பாளர்? நுவன் சொய்சா மற்றும் அவிஸ்க குணவர்தன
பீல்டிங்கா? அது ஒரு தின்பண்டமா என கேட்பவர்கள்

13. பிடித்த ALL-ROUNDER? குளுஸ்னர், பிளின்டொப் மற்றும் அன்ஜலோ மெத்தியுஸ்
கஷ்டமான நேரங்களில் அணிக்கு கை கொடுப்பவர்கள்

14.பிடித்த நடுவர்சைமன் டௌபல், டிக்கி பேர்ட் மற்றும் பில்லி பாடன்
வீரர்களோடு மிகவம் சுமுகமாக நடப்பவர்கள் மற்றும் இரண்டாமவர் மைதானத்தில் உள்ள ரசிகாகளை கவருவதில் மன்னர்.

15.பிடிக்காத நடுவர்? டெரல் ஹெயார் 
காரணம் துவேஷத்தை கிரிக்கட்டில் காட்டியமையினால்

16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்ரிச்சி பேனோ, பில் லாரி, டேனி மொரிசன் மற்றும் இயன் செப்பல்
எந்த அணிக்கும் சார்பாக இல்லாமல் வர்ணனை செய்வதால் இவர்களை பிடிக்கும்

16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்ரவி சாஸ்திரி மற்றும் ரஞ்சித் பொணான்டோ
தங்கள் நாட்டு வீரர்களை மட்டும் உயர்த்தி பேசுவதில் மன்னாகள்

18.பிடித்த அணி? இலங்கை, இலங்கை மற்றும் இலங்கை
ஏன் பிடிக்க கூடாது, எங்கள் நாட்டு அணி ஆகவே பிடிக்கும்

18.பிடிக்காத அணி? இந்தியா
சச்சின் போன்ற பண்பான வீரர்களை கொண்டிருந்தாலும் எனக்கு இந்திய என்றதுமே ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யுவராஜ்சிங் போன்ற வீரர்கள் மற்றைய அணி வீரர்களோடு நடந்து கொள்ளும் நினைவுக்கு வருவதாலாகும்.

20.விரும்பிப்பார்க்கும் அணிகளுக்கிடையிலான போட்டி? இலங்கை விளையாடும் அனைத்து போட்டிகளையும் விரும்பி பார்ப்பேன்

21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி? பிடிக்காத போட்டி என எதுவுமேயில்லை எல்லா கிரிக்கட் போட்டிகளையும் ரசிப்பேன்.

22.பிடித்த அணித்தலைவர்மார்க் டெயிலர் மற்றும் ஷேன் வோன்
இப்போதைய அவுஸ்திரேலிய அணியை பலமான அணியாக மாற்றியதில் மார்க் டெயிலருக்கு முக்கிய பங்குண்டு. ஷேன் வோன் மிக சில போட்டிகளுக்கு மட்டுமே அவுஸ்திரேலியாவுக்கு தலைமைதாங்கினார், மிக சிறந்த தலைவராக வேண்டியிருந்தவர் ஆனால் அவரது நடத்தை காரணமாக நிரந்தர தலைமைப்பதவி கிடைக்கவில்லை, அவுஸ்திரேலியா இழந்த மிக சிற தலைவர் ஷேன் வோன் ஆகும்.

23.பிடிக்காத அணித்தலைவர்? மொஹம்மட் அசாருதீன் 
காசுக்காக தாய் நாட்டை காட்டி கொடுத்தவர், ஹன்சி குரோன்யே என்ற மிக சிறந்த வீரரை சூதாட்டத்திற்கு தூண்டியதும் இவர் செய்த மிகப் பெரிய பிழை.

24.உங்களுக்கு பிடித்த போட்டிவகை?(T20, ODI, TEST)
TEST -ரசித்து சுவைக்க
ODI - அளவுச் சாப்பாடு
T20 - அவசர ருசிக்கு
மூன்றுமே பசியாற்றினால் போதும்.

25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? சனத் ஜயசூரிய, ரொஷான் மகானாம
வேகம், விவேகம், அதிரடி, நிதானம் கலந்த ஜோடி... 

26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி? பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி என யாருமில்லை.

27.(உங்கள் பார்வையில்) சிறந்த டெஸ்ட் வீரர்? முரளிதரன், லாரா, சச்சின்
நீண்ட காலத்திற்கு இவர்களது சாதனைகள் இவர்களை பற்றி பேசும்.

28.கிறிக்கற் வாழ்நாள் சாதனையாளர் (உங்கள் பார்வையில்)? முரளிதரன்
எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் சாதித்து காட்டிய வீரர்

29. சிறந்த கனவான் வீரர் ? லாரா மற்றும் கோட்னி வோல்ஷ்
மைதானத்தில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள்

30. நான் பார்த்து வியந்த வீரர்கள்? சனத் ஜயசூரிய, ஷேவாக் மற்றும் அப்ரிடி
இவங்க தொடங்க மாட்டாங்க தொடங்கிட்டா அப்புறம் நிறுத்த மாட்டாங்க..


இத்தொடரை தொடர 
நான் அழைப்பது: கிரிக்கட் பதிவுகளுக்கு பெயர் போன 2 பிரபல பதிவர்கள்
(நான் அழைப்பவர்களுக்கு ஒரு கருத்து. என் விருப்பங்கள் உங்களின் விருப்புக்களுக்க முற்றுமுழுதாக எதிராக இருந்தாலும் தொடருங்கள். விருப்புக்கள் வேறுபட்டன. தனிப்பட்ட விருப்புக்களுக்கு நான் தலைவணங்குகிறேன், நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்)

இங்கு நான் எழுதியது முற்றிலும் எனது சொந்த கருத்தாகும் யாரையும் புண்படுத்த எழுதவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

  ரொம்ப நாளாக பதிவு எழுதும் பார்மை இழந்து இருந்த எனக்கு இத்தொடர்பதிவை எழுதியதன் பின்னர் இனி கொஞ்சம் எழுதலாம் என தோன்றியிருக்கிறது, எழுத தூண்டியமைக்கு சுபாங்கனுக்கும் கோபிக்கும் நன்றி.