A.R. Rahman எனக்கு பரிச்சயமானது இப்படித்தான்

வார இறுதி எதாவது மியூசிக் சம்பந்தமாக எழுத வேண்டும் என உட்கார்ந்து விட்டேன் என்ன எழுதுவது என யோசிக்கையில் எனக்கு பிடித்த பாடல்களை பற்றி எழுதலாம் என முதலில் யோசித்தேன், எப்படியும் எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி எழுதினால் அதில் A.R. Rahman பற்றி தான் எழுத வேண்டி வரும், ஆகையால்
A.R. Rahman பற்றியே எழுதி விடுகிறேன்...

எனக்கு A.R.R. அறிமுகமானது நான் ஒன்பதாம் வகுப்பு அதாவது பதம் ஆண்டு படிக்கையில், அப்போதைய என் போன்ற டீன் ஏஜ் மாணவர்களின் ஏக்கங்கலான ஹிந்தி பாடல்கள் எல்லாம் ஆங்கில பாடல்களை போல கேட்க மிக அருமையாக இருக்கின்றது எப்ப நம்ம தமிழ் பாடல்கள் இப்படி வர போகுது என எதிர் பார்த்திருந்த போது தான் "சின்ன சின்ன ஆசை" பாடல் எங்களை எல்லாம் யாருடா இந்த புது இசை அமைப்பாளர் என கேட்டு வியந்தோம், அப்புறம் யாரோ ரகுமானாம்டா சின்ன வயசாம்டா என பேசி கொண்டோம், மேலும் அதே படத்தில் உள்ள "புது வெள்ளை மழை" புது விதமான ஒரு மெலடியை வழங்கியது. அந்த நேரத்தில் என்னக்கு ரொம்ப பிடித்த பாடல் இதுதான் (இன்னும் எனக்கு பிடித்த பாடல்களில் இந்த பாடலுக்கு இடமுண்டு)... S.P.B. யின் காலத்தை வென்ற குரலின் இனிமையான பாடலான "காதல் ரோஜாவே" அப்போதைய காலங்களில் தாலாட்டு ஆகவே இருந்தது முற்றிலும் உண்மை, இப்படியே A.R.R இன் பாடல்களை கேட்டு கேட்டு என் வகுப்பு தோழர்கள் எல்லாம் A.R.R. ரசிகர்களாகவே மாறி விட்டோம்.


ஒரு படத்தில் ஒரு பாடல் அல்லது இரண்டு பாடல் மாத்திரம் ஹிட் ஆகும் காலத்திலேயே ரோஜா படம் வந்து ஒரு படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ஆகலாம் என தமிழ் இசை வரலாற்றை திருப்பி போட்டது...

இப்படியே நாங்கள் A.R.R. பாடல்களுக்கு ரசிகர்களாக மாறி இருந்தோம், நாங்கள் G.C.E. (O/L) வகுப்பில் படித்து கொண்டிருந்த நேரம் வந்த காதலன் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எல்லாம் எங்களை ஆடவைத்தன, அதே வருடம் வந்த Bombay படத்தில் இருந்த "உயிரே உயிரே" பாடல் எங்களை உருக வைத்து A.R.R இன் பைத்தியமாகவே மாற்றி விட்டது, ஹரிஹரன் ரசிகர்கள் அதிகம் பேருக்கு பிடித்த பாடல் இதுவாகவே இருக்கும்...



இப்பதிவு தொடரும்


0 Responses